பொள்ளாச்சி கொடூரம்… 3 பேர் கொண்ட குழு விசாரிக்கும்… மகளிர் ஆணையம் அறிவிப்பு
கோவை: பொள்ளாச்சி கொடூரத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் குறைகளை தெரிவிக்கலாம் என மாநில மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.
பொள்ளாச்சியில் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி இளம் பெண்களை தங்களது வலையில் விழ வைத்து அவர்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தும் கும்பல், கல்லூரி மாணவியை கொடுமைப்படுத்திய வீடியோ ஒன்று வெளியாகி நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இது தொடர்பாக, மாக்கினாம்பட்டியைச் சேர்ந்த திருநாவுக்கரசு (27). அதே பகுதியைச் சேர்ந்த சபரிராஜன் (25), சதீஸ் (28), வசந்தகுமார் (24) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மேலும் ஒரு திருப்பமாக, இன்று வெளியான நான்கு வீடியோக்களில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பார் நாகராஜன் இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மேலும் ஒரு பெண் அளித்த புகாரின் அடிப்படையில் பாலா என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்டதற்காக கோவை எஸ்.பி.யிடம் விசாரிக்கப்படும் என்று மாநில மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. பொள்ளாச்சி கொடூரம் பற்றி 3 பேர் கொண்ட குழுவினர் விசாரணை மேற்கொள்வோம் எனவும் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்னவென்பது குறித்து விளக்கம் கோரி தமிழக டிஜிபி ராஜேந்திரனுக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications