பொள்ளாச்சி கொடூரம்… 3 பேர் கொண்ட குழு விசாரிக்கும்… மகளிர் ஆணையம் அறிவிப்பு
கோவை: பொள்ளாச்சி கொடூரத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் குறைகளை தெரிவிக்கலாம் என மாநில மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.
பொள்ளாச்சியில் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி இளம் பெண்களை தங்களது வலையில் விழ வைத்து அவர்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தும் கும்பல், கல்லூரி மாணவியை கொடுமைப்படுத்திய வீடியோ ஒன்று வெளியாகி நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இது தொடர்பாக, மாக்கினாம்பட்டியைச் சேர்ந்த திருநாவுக்கரசு (27). அதே பகுதியைச் சேர்ந்த சபரிராஜன் (25), சதீஸ் (28), வசந்தகுமார் (24) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மேலும் ஒரு திருப்பமாக, இன்று வெளியான நான்கு வீடியோக்களில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பார் நாகராஜன் இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மேலும் ஒரு பெண் அளித்த புகாரின் அடிப்படையில் பாலா என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்டதற்காக கோவை எஸ்.பி.யிடம் விசாரிக்கப்படும் என்று மாநில மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. பொள்ளாச்சி கொடூரம் பற்றி 3 பேர் கொண்ட குழுவினர் விசாரணை மேற்கொள்வோம் எனவும் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்னவென்பது குறித்து விளக்கம் கோரி தமிழக டிஜிபி ராஜேந்திரனுக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications