இன்ஸ்டாகிராமில் பெண் போல பழகி...பேசி... பாலியல் தொல்லை... இளைஞர் கைது

Subscribe to Oneindia Tamil

கோவை : கோவை மாவட்டம் குனியமுத்தூர் அருகே போலி இன்ஸ்டாகிராம் கணக்கு மூலம் பெண்ணிடம் பழகியவர் பாலியல் தொல்லை தந்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண் பெயரில் இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கி, பல பெண்களுடன் நட்பாக பழகும் அந்த இளைஞர் அவர்களது புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து அனுப்பி மிரட்டியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

திருப்பூரை சேர்ந்த பெண் கொடுத்த புகாரில் குனியமுத்தூர் மேட்டுக்காடு பகுதியை சேர்ந்த நிவாஸ் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

திருப்பூர் கல்லூரி மாணவி

திருப்பூர் கல்லூரி மாணவி

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்துள்ளார். இவருடன் இன்ஸ்டாகிராமில் பெண் பெயரில் ஒருவர் புதியதாக அறிமுகம் ஆனார். அறிமுகம் ஆனவர் பெண் பெயரில் கணக்கு இருந்ததால் மாணவி அவருடன் பழகி வந்துள்ளார். பின்னர் அந்த நபரை நம்பி தன்னுடைய செல்போன் எண்ணை கொடுத்துள்ளார். கல்லூரி மாணவியிடம் பேசும்போதெல்லாம் பெண் குரலில் பேசியதால் அந்த மாணவிக்கு சந்தேகம் ஏதும் வரவில்லை. இதற்கிடையே கல்லூரி மாணவியின் புகைப்படங்களை அனுப்புமாறு அந்த நபர் கேட்டுள்ளார். பழகுவது பெண்தானே என்ற அடிப்படையில் தன்னுடைய புகைப்படங்களை அந்த நபருக்கு அனுப்பியுள்ளார்.

நிர்வாண படங்களை அனுப்பினார்

நிர்வாண படங்களை அனுப்பினார்

சில நாட்கள் கழித்து கல்லூரி மாணவிக்கு அவரது புகைப்படங்கள் வந்துள்ளது. அந்த புகைப்படங்களை பார்த்து கல்லூரி மாணவி அதிர்ச்சி அடைந்துள்ளார். அதற்குக் காரணம் அவரது புகைப்படங்கள் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் அந்த நபர் மீது கல்லூரி மாணவிக்கு சந்தேகம் வந்துள்ளது. இதற்கிடையே அந்த மாணவியை அதே எண்ணில் இருந்து தொடர்பு கொண்ட அந்த நபர் ஆண் குரலில் பேசி உள்ளார். பின்னர் கல்லூரி மாணவி நிர்வாணமாக வீடியோ காலில் வர வேண்டும் என கட்டளை இட்டுள்ளார். அப்படி தன்னுடைய ஆசைக்கு இணங்காவிட்டால் ஆபாச புகைப்படங்களை இணையதளத்தில் பதிவேற்றி விடுவதாகவும் மிரட்டியதாக தெரிகிறது. இதனால் மன வேதனை அடைந்த கல்லூரி மாணவி பெற்றோர் உதவியுடன் திருப்பூர் மாநகர காவல் சைபர் கிரைம் போலீசாரை சந்தித்து புகார் அளித்தார்.

கோவையை சேர்ந்தவர் கைது

கோவையை சேர்ந்தவர் கைது

இந்த புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் செல்போன் எண்ணை வைத்து மாணவியை மிரட்டியவர் யார் என தேடி வந்தனர். அப்போது அந்த நபர் கோவை மாவட்டம் குனியமுத்தூரை அடுத்த முட்டுக்காடு பகுதியை சேர்ந்த நியாஸ் என்பது தெரியவந்தது. இதையடுத்து நிவாஸ் கைது செய்யப்பட அவரது செல்போனும் போலீஸ் வசம் சென்றது. அவரது செல்போனை ஆராய்ந்ததில் நிறைய பெண்களின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து நிவாஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.

மீண்டும் ஒரு அதிர்ச்சி

மீண்டும் ஒரு அதிர்ச்சி

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளை பலாத்காரம் செய்த வழக்கில் சபரிராஜன், சதீஷ், திருநாவுக்கரசு, வசந்தகுமார், மணிவண்ணன் உள்ளிட்ட 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டனர். கல்லூரி மாணவிகள் மட்டுமின்றி, குடும்ப தலைவிகளையும் ஏமாற்றி, ஆசை வலையில் விழ வைத்து வீடியோவாக எடுத்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவத்தின் தாக்கமே இன்னும் குறையாத நிலையில் கோவை மாவட்டத்தில் மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+