வீடு வீடாக தனக்கு ஓட்டுக் கேட்கும் கர்ப்பிணி பெண்! கோவையில் களைகட்டிய தேர்தல் திருவிழா!
கோவை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக இன்னும் அறிவிப்பே வராத நிலையில், கோவையில் ஒரு கட்சி பிரச்சாரத்தையே தொடங்கிவிட்டது.
ஏற்கனவே முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கும் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும் இடையேயான அரசியல் ஆடுபுலி ஆட்டத்தால் கோவையில் தேர்தல் களம் அனல் பறப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யமும் தன் பங்குக்கு களமாடத் தொடங்கியிருப்பதால் இப்போதே தேர்தல் திருவிழா கோலம் பூண்டுள்ளது கோவை மாநகரம்.

மக்கள் நீதி மய்யம்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து மாநில தேர்தல் ஆணையம் இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. அதற்குள் கோவை மாநகராட்சி வார்டு கவுன்சிலர் பதவியிடங்களுக்கு போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துவிட்ட கமல்ஹாசன், தேர்தல் பிரச்சார பணிகளையும் தொடங்கிவிட்டார். அந்த வகையில் ம.நீ.ம. நிர்வாகிகள் வீதி வீதியாக வாக்குகள் சேகரிக்கத் தொடங்கிவிட்டார்கள்.

கர்ப்பிணி பெண்
இதில் என்ன விஷேஷம் என்றால், 6 மாத கால கர்ப்பிணி பெண் ஒருவரும் கவுன்சிலர் பதவியிடத்துக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கோவை பி.என்.புதூர் பகுதியில் அதாவது 41-வது வார்டில் போட்டியிடும் அந்த கர்ப்பிணி பெண் வேட்பாளரான நந்தினியிடம் நாம் இது குறித்து பேசினோம். அப்போது கூறிய அவர், ''எனது கணவர் மக்கள் நீதி மய்யம் தொடங்கிய நாள் முதல் அக்கட்சியில் உறுப்பினராக இருக்கிறார்.''

பொதுவாழ்க்கை
''அவருடைய விருப்பத்தின் பேரில் தான் நான் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுகிறேன். எனது வார்டில் மொத்தம் 13,000 வாக்குகள் உள்ளன. பொதுவாக கொரோனா காலம் என்பதால் இது போன்ற சூழலில் வெளியே வரவே பலரும் அஞ்சுவார்கள். பொதுவாழ்க்கைக்கு வந்த பிறகு இதற்கெல்லாம் அஞ்சக்கூடாது என்பதால் நான் தைரியமாக வெளியே செல்கிறேன். நான் செய்யவிருப்பதை கூறி வாக்குகள் சேகரிப்பேன்.'' எனக் கூறி முடித்தார் நந்தினி.

நேர்காணல்கள்
இதனிடையே திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளில் இப்போது தான் நேர்காணல்கள் முடிக்கப்பட்டு வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டு வருகிறது. விரைவில் நாம் தமிழர் கட்சியும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடும் எனத் தெரிகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications