எங்க பஸ்ல தான் ஸ்கூலுக்கு வரணும்.. சிறை வைக்கப்பட்ட மாணவர்கள்.. அடாவடியில் ஈடுபட்ட தனியார் பள்ளி
கோவை: மாணவ, மாணவிகள் பள்ளிக்கு சொந்தமான பேருந்தில் தான் வர வேண்டும் என கூறி தனியார் பள்ளி நிர்வாகம் ஒன்று, குழந்தைகளை 2 மணி நேரம் சிறைப்பிடித்து வைத்த சம்பவம் குறித்து வெளியாகியுள்ள தகவலால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
கோவை அருகே விளாங்குறிச்சி பகுதியில் தனியார் மெட்ரிக் பள்ளி ஒன்றி இயங்கி வருகிறது. இங்கு கேஜி முதல் 12-ம் வகுப்பு வரை பாடம் பயிற்றுவிக்கப்படுகிறது. இப்பள்ளியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருவதாக கூறப்படுகிறது.

வழக்கமாக மாலை 3 மணிக்கு பள்ளி முடிந்து சிறிது நேரத்தில் மாணவர்கள் வீடு திரும்பி விடுவார்கள். இந்நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன் மாலை 4 மணிக்கு மேலாகியும், மாணவர்கள் யாரும் தங்களது வீடுகளுக்கு திரும்பி செல்லவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பதறியடித்து கொண்டு பள்ளிக்கு விரைந்து சென்று பார்த்தனர். அங்கு பார்த்தால் மாணவ, மாணவிகளை வீட்டுக்கு திருப்பி அனுப்பாமல், பள்ளி வளாகத்திலேயே ஆசிரியர்களும், பள்ளி நிர்வாகமும் உட்கார வைத்திருந்தர்.
இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் பள்ளி நேரம் முடிந்த பின்னும் ஏன் இன்னும் எங்கள் குழந்தைகளை வீட்டுக்கு அனுப்பாமல் உட்கார வைத்திருக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினர்.
இதற்கு அந்த பள்ளி நிர்வாகம் தந்த பதில் தான் பெற்றோரை ஆத்திரத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்றது. பெற்றோரின் கேள்விக்கு பதிலளித்த பள்ளி நிர்வாகிகள், தங்கள் பள்ளிக்கு சொந்தமான பேருந்துகள் மற்றும் வாகனங்களில் தான் மாணவர்களை எங்களிடம் படிக்க அனுப்ப வேண்டும்.
அதை விடுத்து தனியார் வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களில் தங்கள் பள்ளிக்கு மாணவர்களை அனுப்ப கூடாது என நிபந்தனை விதித்தனர். தனியார் பள்ளி நிர்வாகத்தின் இந்த அடாவடி நிபந்தனையால், கடுப்பான பெற்றோர் அங்கிருந்த நிர்வாகிகளுடன் கடும் வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம் முற்றியதால் ஒரு கட்டத்தில் கைகலப்பு ஏற்படும் சூழலும் உருவானதாக கூறப்படுகிறது. பிரச்சனை தீவிரமாவதை உணர்ந்த பள்ளி நிர்வாகம், மாணவர்கள் எந்த வாகனங்களில் பள்ளிக்கு வர வேண்டும் என்பது குறித்து பிறகு பேசி கொள்ளலாம் என கூறி, பெற்றோர்களுடன் அவர்களது பிள்ளைகளை வீட்டுக்கு திருப்பியனுப்பியுள்ளது.
பள்ளிக்கு சொந்தமான வாகனங்களில் தான் மாணவர்கள் வர வேண்டும் என்ற காரணத்திற்காக பள்ளி வளாகத்தில் மாணவர்கள் சிறை பிடித்து வைக்கப்பட்ட சம்பவத்தால் கோவை மாநகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications