Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாட்டில் பாஜகவின் மேஜர் பிளான்.. லோக்சபா தேர்தல் குறித்து பேட்டியில் போட்டுடைத்த அண்ணாமலை

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் சாம தண்ட பேத தானம் என எல்லாவற்றையும் பயன்படுத்துவோம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். இந்த பேட்டியை பற்றியும் பாஜகவின் வியூகம் குறித்தும் பார்ப்போம்.


இந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, திமுகவிற்கு மாற்றாக தனித்து களம் காண போகிறது பாஜக. இந்த தேர்தல் தமிழக பாஜகவின் பலத்தை நிரூபிக்கும் தேர்தலாக பார்க்கப்படுகிறது. இதில் வெற்றி என்பதை தாண்டி, இரட்டை இலக்ககத்தில் வாக்கு சதவீதம் பெற்றாலே அண்ணாமலைக்கு பெரிய வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.

Tamil Nadu BJPs Major Plan for Lok Sabha Election 2024 and What Annamalai Said in Coimbatore?

நோட்டா உடன் போட்டி போடும் கட்சி என்று அதிமுக, திமுக கட்சிகள் கிண்டல் செய்து வருகின்றன. இந்நிலையில் 10 வருடமாக மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக, திராவிட கட்சிகளுக்கு மாற்றாக களம் கண்டு மாற்று என நிரூபிக்க விரும்புகிறது. ஆனால் களம் பாஜகவிற்கு அவ்வளவு எளிதாக இருக்காது என்பதால், எதிர்கொள்ள மற்ற மாநிலங்களில் மேற்கொண்ட வியூகங்களை தமிழகத்திலும் பயன்படுத்தி வருகிறது. மற்ற மாநிலங்களில் பிற கட்சிகளின் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், முக்கிய தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலரை கட்சியில் சேர்த்தது. அதேபோல் தமிழ்நாட்டில் வியூகம் அமைத்து நிர்வாகிகளை சேர்த்து வருகிறது.

உதாரணத்திற்கு திமுகவின் கேபி ராமலிங்கம், காங்கிரஸில் இருந்து குஷ்பு, ஜோதிமணி போன்ற பல்வேறு முக்கிய தலைவர்களை சேர்த்தது. இன்னமும் பலரை அதிமுக மற்றும் திமுகவில் இருந்து சேர்க்க பாஜக விரும்புகிறது. வலிமையான கட்சி என்ற கட்டமைப்பை உருவாக்க பாஜக-வின் வியூகம் மிக கடுமையாக இருக்கிறது. வெறும் மேல் மட்ட நிர்வாகிகள் என்று இல்லாமல், கிராமங்களில், நகரங்களில் நடுத்தர வர்க்கத்தினரை அதிகம் கட்சியில் சேர்த்து வருகிறது. கட்சியில் சேருவோருக்கு ஏராளமான பொறுப்புகளை வாரி வழங்கி வருகிறது.


இந்நிலையில் கோவையில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், பாஜகவை வெற்றி பெற வைக்க, சாம தண்ட பேத தானம் என எல்லாவற்றையும் பயன்படுத்துவோம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். இதுபற்றி மேலும் அண்ணாமலை கூறும் போது, " எங்கள் கட்சியில் பெரிய புள்ளி மட்டுமல்ல.. நிறைய பேர் இணைய உள்ளார்கள். நாங்கள் சொல்லும் இடத்தில் அவர்கள் இணைவார்கள் என்பதில்லை. எங்கள் கட்சியில் இணையும் சிலருக்கு டெல்லி சென்று இணைய வேண்டும் என்று ஆசையும் இருக்கிறது.

அதேநேரம் எங்கள் கட்சியில் பெரிய தலைவர்கள் இருக்கிறார்கள். வெளியே மற்ற கட்சியில் இருந்தவர்கள் வரும் காரணத்தால், எங்கள் கட்சியில் இத்தனை ஆண்டுகள் இருக்கும் தலைவர்களை சமாதானம் செய்ய வேண்டியுள்ளது. ஏனென்றால் வருகிறவர்கள் மிகப்பெரிய ஆளாக இருக்கும் போது இவையெல்லாம் நிகழ்வது சாதாரணம்.

ஏனெனில் எங்கள் கட்சியில் இணைய வருபவர்கள் எம்எல்ஏவாகவோ, முன்னாள் எம்எல்ஏவாகவோ இருக்கலாம். இப்போது எங்கள் கட்சியில் இணைபவர்கள், தேர்தலில் நிற்கக்கூடிய சர்வ வல்லமை பொருந்தியவர்களாக உள்ளார்கள். அதனால் அவர்களுக்கான இடத்தை ஏற்படுத்த வேண்டியுள்ளது. அவர்களுக்கு உரிய மரியாதையை கொடுக்க வேண்டும். அவர்களை தொண்டர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும். வந்தபிறகு அவர்களுக்கு பிரச்சினை ஏற்பட்டு விடக்கூடாது என்று கட்சித் தலைமை விரும்புகிறது.

பிரதமர் மோடி தமிழ்நாடு வந்திருப்பதால், அதில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். அதற்காகவே முக்கிய புள்ளிகள் கட்சியில் இணையும் விழாவை ஒத்திவைத்துள்ளோம்.. நீங்கள் பொறுத்திருந்து பாருங்கள், மிகப்பெரிய ஆட்கள் பாஜகவில் இணையத்தான் போகிறார்கள். பாஜகவை பொறுத்தவரை நாங்கள் யாரையும் இணைய கூப்பிடவில்லை. அவர்களாகவே வந்து கட்சியில் இணைகிறார்கள். தமிழ்நாட்டில் பாஜகவை வெற்றி பெற வைக்க, சாம தண்ட பேத தானம் என எல்லாவற்றையும் பயன்படுத்துவோம்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+