தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் & உதவியாளருக்கு கொரோனா.. மருத்துவமனையில் அனுமதி
கோவை: தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காகக் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Recommended Video
தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சராக உள்ளவர் மு.பெ.சாமிநாதன். இவரது உதவியாளராக செல்லமுத்து என்பவர் உள்ளார். 53 வயதாகும் செல்லமுத்துவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் சளி மற்றும் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அமைச்சரின் உதவியாளர் செல்லமுத்துவுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா சோதனையில் அவருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
செல்லமுத்து அமைச்சர் மு.பெ.சாமிநாதனுடன் நேரடியாகத் தொடர்பில் இருந்தவர் என்பதால் அமைச்சருக்கும் கடந்த 14ஆம் தேதி இரவு கொரோனா சோதனை செய்யப்பட்டது.
அதில் அமைச்சர் அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து அமைச்சர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அமைச்சருக்கு லேசான அளவிலேயே பாதிப்பு உள்ளதாக மருத்துவனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக திமுக சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி தனது ட்விட்டரில், 'காங்கேயம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், தமிழக செய்தித்துறை அமைச்சருமான மு. பெ. சாமிநாதன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை அறிந்து வேதனை அடைந்தேன். மு. பெ. சாமிநாதன் விரைவில் முழுமையாக நலம் பெற்று மக்கள் பணியைச் சிறப்புடன், தொடர வேண்டும்'' என்று பதிவிட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஜனவரி முதல் தடுப்பூசி.. அரசு அறிவிப்பு!
அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கு கொரோனா உறுதியானதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கும் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. நல்வாய்ப்பாக அவர்களில் யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.