கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திருநாவுக்கரசின் மறுபக்கம்.. படிப்பு எம்பிஏ.. காதல் கல்யாணம்.. வண்டவாளம் அம்பலமாக ஓடிப் போன மனைவி!

Google Oneindia Tamil News

Recommended Video

    Pollachi Thirunavukkarasu: படிக்கும் போதே காம வெறியனாக வலம் வந்த திருநாவுக்கரசு- வீடியோ

    கோவை: விஷயம் தெரியுமா... 400 பொண்ணுங்களை நாசமாக்கின திருநாவுக்கரசு கல்யாணம் ஆன ஆசாமியாம்!

    1500 வீடியோக்கள்.. 400 இளம் பெண்களை கதற கதற சீரழித்த 4 பேரில் முக்கியமானவன் திருநாவுக்கரசு. இந்த கேங் லீடர் ஏற்கனவே கல்யாணம் ஆனவராம்.

    பணத்தை கொட்டி எம்பிஏ படிக்க வெச்சும் இப்படி ஈனசெயலில்தான் திருநாவுக்கரசு ஈடுபட்டு வந்திருக்கிறார். பைனான்ஸ் தொழில் எல்லாம் சும்மா ஒரு பார்ட் டைம் ஜாப் போல இருந்திருக்கு!

    பொள்ளாச்சி பலாத்கார வழக்கு.. நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரணை கிடையாது பொள்ளாச்சி பலாத்கார வழக்கு.. நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரணை கிடையாது

    பெண் மீது காதல்

    பெண் மீது காதல்

    காலைல 6 மணிக்கு வீட்டை விட்டு திருநாவுக்கரசு வெளியே போனா ராத்திரி 10.30-க்குத்தான் திரும்பி வருவானாம். அந்த அளவுக்கு பிள்ளை வேலை வெட்டியை பாக்குறதா வீட்டில் நம்பி இருந்திருக்காங்க. காலேஜ் படிக்கும்போதே அழகான பெண்களை ரவுண்டு கட்டி, வலையில் விழ வைத்து, சீரழித்து, வீடியோ எடுத்து, இவ்வளவு செய்தாலும், திருநாவுக்கரசு ஒரு பெண்ணை லவ் செய்தான் என்றால் நம்ப முடிகிறதா?

    பச்சை குத்தினார்

    பச்சை குத்தினார்

    அந்த பெண் ஒரு நகைக் கடைக்கார பொண்ணாம். திருநாவுக்கரசை பற்றி எதுவுமே தெரியாத அந்த பெண்ணுக்கும் இவனை உயிருக்கு உயிராக விரும்பியிருக்கிறார். அந்த பொண்ணு மேல் இருக்கிற லவ் காரணமாக கையில் அந்த பெண்ணின் பெயரை பச்சை குத்தியிருக்கிறானாம் திருநாவுக்கரசு.

    பையன் நல்லவன்

    பையன் நல்லவன்

    இந்த விஷயம் வீட்டுக்கு தெரிந்திருக்கிறது. ஆனால் பொண்ணு வீட்ல ஒத்துக்கல போலிருக்கிறது. அதனால் பொண்ணு வீட்டுக்கு தெரியாம ரெண்டு பேருக்கும் தன் வீட்லயே கல்யாணம் பண்ணி வெச்சிருக்காங்க... இப்படி கல்யாணம் பண்ணி வெச்சது யார் தெரியுமா? பொள்ளாச்சி கோர்ட்ல வந்து "என் பையன் நல்லவன், அவனுக்கு எதுவுமே தெரியாது" என்று வரிந்துகட்டிக்கொண்டு சண்டைக்கு வந்த திருநாவுக்கரசு அம்மாதான்!

    வேறு கல்யாணம்

    வேறு கல்யாணம்

    ஆனா கல்யாணம் ஆன சில மாசத்திலேயே திருநாவுக்கரசு வண்டவாளம் தெரிந்துவிட, அந்த பொண்ணு சண்டை போட்டுவிட்டு பிரிந்து போய்விட்டதாம். இப்போது வேறு ஒருவரை கல்யாணம் செய்து கொண்டு நிம்மதியாக இருக்கிறாராம். நல்லவேளை அந்த பொண்ணு தப்பித்துவிட்டார் என்கிறார்கள் அந்த பகுதி மக்கள்!

    English summary
    Pollachi Thirunavukarasu has already been married. But the wife is said to have married another
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X