கெளசல்யா தந்தை சின்னசாமி விடுதலை- சிறைவாசலில் ஜாதி அமைப்பு நிர்வாகிகள் சாலை அணிவித்து வரவேற்பு
கோவை: உடுமலைப்பேட்டை சங்கர் ஜாதி ஆணவக் கொலை வழக்கில் கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த கெளசல்யாவின் தந்தை சின்னசாமி சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை தொடர்ந்து இன்று விடுதலை செய்யப்பட்டார். அவரை சிறை வாசலில் ஜாதிய அமைப்பின் நிர்வாகிகள் சாலை அணிவித்து வரவேற்றனர்.
2016-ம் ஆண்டு ஜாதி மாறி திருமணம் செய்து கொண்ட உடுமலைப்பேட்டை சங்கரும் கெளசல்யாவும் பட்டப்பகலில் கூலிப்படையால் கொடூரமாக தாக்கப்பட்டனர். இந்த தாக்குதலில் சங்கர் உயிரிழந்தார். கெளசல்யா மட்டும் உயிர் பிழைத்தார்.

இது தொடர்பான வழக்கில் கெளசல்யாவின் தந்தை சின்னசாமி, தாய் அன்னலட்சுமி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் திருப்பூர் நீதிமன்றத்தால் தாய் அன்னலட்சுமி உட்பட 3 பேர் விடுவிக்கப்பட்டனர். மேலும் கெளசல்யாவின் தந்தை சின்னசாமி உட்பட 6 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார் திருப்பூர் நீதிமன்ற நீதிபதி அலமேலு நடராஜன்.

இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்து தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், சின்னசாமியை விடுதலை செய்தது. மேலும் 5 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய தன்ராஜ், மணிகண்டன் ஆகியோரையும் விடுதலை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனடிப்படையில் கோவை சிறையில் இருந்து இன்று சின்னசாமி, தன்ராஜ், மணிகண்டன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். சின்னசாமி உள்ளிட்ட 3 பேரையும் சிறைவாசலில் ஜாதிய அமைப்பு நிர்வாகிகள் சிலர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications