Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2 பெண்கள் செய்த காரியம்.. "ஓடியாங்க.. ஓடியாங்க".. எக்கச்சக்கமாக சிக்கி தப்பிய திமுகவினர்.. என்னாச்சு

திமுகவினரை கையும் களவுமாக பிடித்த பாஜகவினர்

Subscribe to Oneindia Tamil

கோவை: திமுகவினர் பணப்பட்டுவாடா செய்ததாக குற்றம் சாட்டிய பாஜக மற்றும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனித்துபோட்டி என்ற துணிச்சல் முடிவுடன் பாஜக களமிறங்கி உள்ளது.. ஆனால், இதுவரை இல்லாத அளவிற்கு 11 முனை போட்டி நிலவும் வகையில் தேர்தல் களம் உள்ளது.. எப்படியும் வாக்குகள் பிரியவே செய்யும்.. இது பாஜக தலைவர்களும் உணராமல் இல்லை..

அதேசமயம், பாஜகவுக்கு தமிழகத்திலேயே கொங்கு மண்டலத்தில் தான் ஓரளவு ஆதரவு உள்ளது.. இந்த கோவையை பெரிதும் நம்பித்தான் துணிந்து போட்டியிட்டுள்ளது.

 கோவை

கோவை

தங்களுக்கு கோவையில் அதிக செல்வாக்குள்ளதால், மேயர் சீட் கேட்டது பாஜக.. ஆனால், தங்களுக்கும் கோவையில் பெரும்பான்மையான செல்வாக்கு உள்ளதாக கூறி அதிமுக கோவையை தரவில்லை.. அதுபோலவே சென்னையையும் பாஜக கேட்டுபார்த்தது.. அதையும் அதிமுக தரவில்லை.. எனவேதான் தனித்து போட்டி என அறிவித்தது.. கோவையின் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என 13,000 இடங்களுக்குப் போட்டி நடந்தாலும், இதில், கோவை, சேலத்தில் 2,000 இடங்கள் இருக்கின்றன..

பாஜக

பாஜக

இதில் எத்தனை இடங்களை திமுக கூட்டணி, அதிமுக பிடிக்க போகிறது? என்பதே அனைவருடைய எதிர்பார்ப்பும்.. அதற்கு பிறகுதான், பாஜக உள்ளிட்ட மற்ற கட்சிகளுக்கான வாக்குகள் எவ்வளவு பிரியும் என்பது தெரியவரும். இந்நிலையில் கடந்த 2 மாதமாகவே திமுக மீது பாஜகவும், அதிமுகவும் சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.. ஓட்டுக்கு பணம் தருவதாகவும், பரிசு பொருட்களை விநியோகம் செய்வதாகவும் புகார் கூறி வருகின்றன..

கோவை

கோவை

இப்போதுகூட கோவையில் அப்படி ஒரு புகார் எழுந்து, பரபரப்பை கூட்டிவிட்டது.. கோவை மாநகராட்சி 63 வது வார்டில் திமுக சார்பில் சாந்தி முருகனும், அதிமுக சார்பில் லதா திருமுகமும், பாஜக சார்பில் கவிதா ராஜனும் போட்டியிடுகின்றனர்... ஆனால், ராமநாதபுரம் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் திமுகவினர் பூத் ஸ்லிப்புடன் பணம் கொடுப்பதாக சொல்லி பாஜக, அதிமுகவினர் சம்பந்தப்பட்ட திருமண மண்டபம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 பாஜக வேட்பாளர்

பாஜக வேட்பாளர்

திருமண மண்டபத்திற்குள் 200 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இருந்த நிலையில் பொதுமக்களையும், திமுகவினரையும் திருமண மண்டபத்திற்குள்ளேயே வைத்து முன்பக்க கதவை பாஜக வேட்பாளர் கவிதா ராஜனும், அதிமுகவினரும் பூட்டு போட்டு பூட்டினர்... பிறகு, திமுகவினர் பணம் பட்டுவாடா செய்வது குறித்து தேர்தல் அதிகாரிகளுக்கு இருவரும் தகவல் தந்தனர்.. போலீசாரும் விரைந்து வருவதற்குள், திமுகவினர் திருமண மண்டபத்தில் பின்புற வாசல் கதவை திறந்து விட்டு பொதுமக்களை வெளியேற்றினர்.

 தள்ளுமுள்ளு

தள்ளுமுள்ளு

பொது மக்கள் கூட்டமாக பின்புற வாசல் வழியாக வெளியேறிய நிலையில், அவர்களை பாஜக மற்றும் அதிமுகவினர் தடுத்தனர்... இதனால், வாக்குவாதம், தள்ளு முள்ளு, கைகலப்பு போன்றவை ஏற்பட்டது.. போலீசார் அசம்பாவிதம் நடக்காமல் இவர்களை சமாதானப்படுத்தினர்.. எனினும் உயர் அதிகாரிகள் வருவதற்கு முன்பேயே திமுகவினரும் பொதுமக்களும் கலைந்து சென்றுவிட்டனர்.. இப்போது விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.. உண்மையிலேயே திமுகவினர் பணம் கொடுக்கப்பட்டதா? என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.

Recommended Video

    முன்னொரு காலத்தில் Episode01 | Chitra Ramkrishna NSE | Himalayan Yogi | Oneindia Tamil
    ஆர்ப்பாட்டம்

    ஆர்ப்பாட்டம்

    ஆனாலும் பாஜகவால் இதை ஜீரணிக்கவே முடியவில்லை.. திமுகவினர் தப்பி சென்றுவிட்ட நிலையில், அவர்களின் செயலை கண்டித்து அதிமுகவினருடன் சேர்ந்து கண்டன முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்... "பணம் கொடுக்கும் விஷயமே லேட்டாகதான் தெரிந்தது.. அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை" என்று வேட்பாளர் கவிதாராஜன் குற்றம்சாட்டினார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+