கோவை மக்களே! வேற லெவலில் ரெடியாகும் அவிநாசி சாலை! வருகிறது சூப்பர் திட்டம்! இனி காத்திருக்க வேண்டாம்
கோவை: தமிழ்நாட்டின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றான கோவையில் டிராபிக் ஒரு முக்கிய பிரச்சினையாக இருக்கும் நிலையில், அதைத் தீர்க்க முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நமது நாட்டில் மின்னல் வேகத்தில் வளரும் நகரங்களில் டாப் இடத்தில் கோவை இருக்கிறது. இதன் காரணமாகவே மத்திய அரசும் கூட வந்தே பாரத் தொடங்கிப் பல திட்டங்களைக் கோவையில் செயல்படுத்தி வருகிறது.
தமிழ்நாட்டிலும் கூட சென்னைக்கு அடுத்து முக்கியமான நகரங்களில் ஒன்றாகக் கோவை இருக்கிறது. இதனால் அங்கே சுற்றியுள்ள பல ஊர்களைச் சேர்ந்த மக்களும் கோவையை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர்.

கோவை: இதனால் கோவையிலும் மக்கள்தொகை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. ஐடி, தொழிற்சாலைகள் எனப் பல துறைகளில் கோவை சென்னைக்கு அடுத்து முக்கியமான இடத்தில் இருக்கிறது. பேருந்து சேவையைத் தவிர அங்கே பொது போக்குவரத்து பெரிதாக இல்லை. சென்னையைப் போல மின்சார ரயில்களோ அல்லது மெட்ரோ ரயில் சேவையோ அங்கே இல்லை என்பது பெரிய குறையாகவே இருக்கிறது.
இதனால் அங்கே டிராபிக் பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. ஒவ்வொரு நாளும் பீக் ஹவரில் வெளியே செல்லும் போது டிராபிக்கில் கொஞ்ச நேரம் ரோட்டிலேயே காத்திருக்க வேண்டிய சூழலே இருக்கிறது. டிராபிக் பிரச்சினையைத் தீர்க்க கோவை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அவிநாசி சாலை: கோவையைப் பொறுத்தவரை அங்கே அதிக டிராபிக் இருக்கும் நகரமாகக் கோவை அவிநாசி சாலை இருக்கிறது. அங்கே வாகன நெரிசல் எப்போதும் அதிகமாகவே இருக்கும்.. அப்பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலைச் சரி செய்யும் வகையில் அங்கே மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

அவிநாசி சாலையில் 10.1 கிமீ நீளத்திற்கு அமையும் இந்த மேம்பாலப் பணிகள் சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இருப்பினும், கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளால் கட்டுமானத்தில் தாமதம் ஏற்பட்டது. இதனிடையே இந்தப் பணிகள் அடுத்தாண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேம்பாலம்: இந்த மேம்பாலத்திற்கு மொத்தம் 306 தூண்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. அதில் 286 தூண்கள் அமைக்கும் பணிகள் ஏற்கனவே முடிந்துவிட்டது. மீதமுள்ள சுமார் 20 தூண்கள் லட்சுமி மில், நவ இந்தியா சந்திப்பு, ஹோப் காலேஜ் சந்திப்பு ஆகிய இடங்களில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பணிகள் அங்கு படுவேகமாக நடந்து வருகிறது.
சுமார் 45% பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் நில கையகப்படுத்தும் பணிகள் கொஞ்சம் இருக்கும் நிலையில், அதுவும் முடிக்கப்பட்டு கட்டுமான பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் அடுத்தாண்டு ஆகஸ்ட் மாதம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மேம்பாலப் பணிகள் நிறைவடைந்தால், அவினாசி சாலையில் டிராபிக் வெகுவாக குறையும்.
முன்னதாக அவினாசி சாலையை சிக்னல் இல்லாத சாலையாக மாற்றும் நடவடிக்கையைக் கோவை போலீசார் எடுத்தனர். அதன்படி அந்த சாலையில் இருந்த சிக்னல்கள் தற்காலிகமாக ஆப் செய்யப்பட்டு, அதற்குப் பதிலாக யூடர்ன் போடும் வசதி ஏற்படுத்தப்பட்டு இருந்தது. இதன் மூலம் அவினாசி சாலையாக மாறிய நிலையில், அதற்கும் ஓரளவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துக் குறிப்பிடத்தக்கது.
-
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ்












Click it and Unblock the Notifications