15 வயசு சிறுமி.. கடத்தி கல்யாணம்.. 5 மாசத்தில் கைக்குழந்தை வேறு.. இளைஞரை தூக்கி உள்ளே வைத்த போலீஸ்

Subscribe to Oneindia Tamil

கோவை: 15 வயசு சிறுமியை கடத்தி கல்யாணம் செய்து.. அந்த பொண்ணு கூட குடும்பம் நடத்தி.. 5 மாசத்தில் குழந்தையும் பெற்றிருக்கிறார் அஜித்குமார்! இப்போ மாமியார் வீட்டுக்கு அள்ளிக்கிட்டு போய்ட்டாங்க போலீசார்!

கோவை பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் அஜித்குமார். 20 வயசாகிறது. பைக்குகள் சேல்ஸ் பண்ணும் வேலை பார்க்கிறார்.

Youth arrested under pocso act in Coimbatore

இவர் கடந்த 2016-ம் வருஷம் 15 வயது சிறுமியை காதலிப்பதாக சொல்லி பழகி உள்ளார். அந்த பெண் அஜித்குமார் மீது அதிக நம்பிக்கை வைக்கவும், அதையே சாக்காக வைத்து கடத்தி கொண்டு போய்விட்டார்.

மகளை காணோம் என்று பெற்றோர் போலீசில் புகார் தந்து இறுதியில் மீட்டனர். ஆனால் அஜித்குமார் திரும்பவும் அதே சிறுமியை கடத்தி கொண்டு போனார். கல்யாணமும் செய்து கொண்டு, குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பமாகி, இப்போது 5 மாசத்தில் பெண் குழந்தை உள்ளது.

அது மட்டும் இல்லை.. சிறுமியை தினந்தோறும் அடித்து கொடுமைப்படுத்தியும் வந்திருக்கிறார். ஒருகட்டத்தில் இதையெல்லாம் பொறுக்க முடியாத சிறுமி அங்கிருந்து தப்பி, திடீரென கைக்குழந்தையை தூக்கி கொண்டு பெற்றோர் வீட்டுக்குள் தஞ்சம் அடைந்தாள்.

நடந்த விஷயங்களை அறிந்த பெற்றோர் இது குறித்து துடியலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து, போலீசார் அஜித்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+