Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவையில் நண்பன் இறந்தது தெரியாமல்.. விபத்தை ஏற்படுத்திய இளைஞரை மருத்துவமனையில் சேர்த்து உதவிய இளைஞர்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை போத்தனூரைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் அந்த பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். கார்த்தியும் அவருடன் படித்து வந்த சிவா என்பவரும் கல்லூரி முடிந்ததும் பகுதி நேரமாக ஓட்டலில் வேலை செய்து வந்தார்கள். இந்நிலையில் கார்த்திக் நடந்து வந்த போது விபத்தில் சிக்கி புதர் செடிக்குள் மயங்கி விழுந்தார். இது தெரியாமல் அவரது நண்பர் சிவா, விபத்தை ஏற்படுத்திய இருசக்கர வாகனத்தில் வந்த தேனி இளைஞரை காப்பாற்றி அவருக்காக விடிய விடிய மருத்துவமனையில் காத்துக்கிடந்தார்.

நடந்து செல்வோருக்கு இப்போது உள்ள சாலைகள் பாதுகாப்பானதாக இல்லை என்கிற அளவிற்கு வாகன நெருக்கம் எல்லா ஊரிலும் அதிகரித்துவிட்டது. தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் இரவு நேரங்களில் நடந்து சென்றால், இருட்டில் சரியாக கவனிக்காமல் வாகன ஓட்டிகள் விபத்தினை ஏற்படுத்துவது அடிக்கடி நடக்கிறது. இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையோரங்களில செல்லும் போது, நடந்து செல்வோர் மீது மோதுவது அடிக்கடி நடக்கிறது. கோவையில் நடந்து சென்ற கல்லூரி மாணவருக்கு நடந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Coimbatore student hospital

கோவை போத்தனூர் காளிபுரத்தை சேர்ந்தவ 21 வயதாகும் கார்த்திக் அங்குள்ள கல்லூரி விடுதியில் தங்கியிருந்து பி.காம். 3-ம்ஆண்டு படித்து வந்தார். கார்த்திக்கும் அவருடன் படிக்கும் சிவா என்பவரும் கல்லூரி முடிந்ததும் அங்கு உள்ள ஓட்டலில் பகுதிநேர வேலை செய்து வந்தார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் கார்த்திக்கும், சிவாவும் இரவுப்பணி முடிந்து 2 பேரும் தங்கி இருந்த விடுதிக்கு நடந்து சென்றுள்ளார்கள். இருவரும் ஒரே சமயத்தில் நடந்து செல்லவில்லை..

மாணவர் கார்த்திக் ஓட்டலில் பணி முடிந்து முன்னால் சென்று கொண்டிருக்க, சிறிது இடைவெளிவிட்டு பின்னால் சிவா நடந்து சென்று கொண்டிருந்தார். சிவாவிற்கு தன் முன்னால் கார்த்திக் நடந்து சென்றது தெரியவில்லை.. கார்த்திக் ரூமிற்கு போய்விட்டதாக நினைத்துக் கொண்டு நடந்து சென்றுள்ளார். அப்போது எல் அண்டு டி பைபாஸ் ரோட்டில் ஜல்லிக்கட்டு மைதானம் அருகே தேனியை சேர்ந்த ஷெர்னிக்குட்டி (21) என்பவர் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்துள்ளார். ஆனால் அவர் நிலைதடுமாறி கார்த்திக் மீது மோதியுள்ளார். இதில் கார்த்திக் தூக்கி வீசப்பட்டு அருகில் உள்ள புதர்செடிக்குள் விழுந்தார். இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த ஷெர்னிக்குட்டியும் பலத்த காயம் அடைந்தார்.

இதற்கிடையே கார்த்திக்குக்கு பின்னால் நடந்து வந்த சிவா, படுகாயம் அடைந்து கிடந்த ஷெர்னிக்குட்டி விபத்தில் அடிபட்டு இருப்பதை கண்டு, காரில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அப்போது அவர் கார்த்திக் விபத்தில் சிக்கி சாலையோர புதர்செடிக்குள் கிடப்பதை பார்க்கவில்லை. கார்த்திக் ரூமிற்கு சென்று இருப்பார் என நினைத்த சிவா, தேனி வாலிபரை மருத்துவமனையில் சேர்த்து இரவு முழுவதும் பாதுகாப்புக்காக அங்கேயே இருந்துள்ளார்.

இதனிடையே விபத்தில் சிக்கி விடிய விடிய உயிருக்கு போராடிய கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையே காலையில் விடுதிக்கு வந்து பார்த்தபோதுதான், கார்த்திக் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி பலியானது தெரியவந்தது. இந்த சம்பவம் கோவையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.விபத்து தொடர்பாக போக்குவரத்து பிரிவு போலீசார் தேனி இளைஞர் ஷெர்னிக்குட்டி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+