அதானி விவகாரத்தில் பிரதமர் மோடி மீது புகார்- இலங்கை மின்வாரிய தலைவர் பெர்டினாண்டோ திடீர் ராஜினாமா
கொழும்பு: இலங்கை மன்னார் காற்றாலை மற்றும் சூரியசக்தி மின்திட்டத்தை அதானி குழுமத்துக்கு கொடுத்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மீது புகார் தெரிவித்து சர்ச்சையில் சிக்கிய இலங்கை மின்சார வாரிய தலைவர் பெர்டினாண்டோ இன்று தமது பதவியை ராஜினாமா செய்தார்.
Recommended Video
இந்தியாவின் தென் கடல் எல்லையான மன்னார் வளைகுடாவில் மிக பிரம்மாண்டமான காற்றாலை, சூரியமின்சக்தி திட்டத்தை இலங்கை, அதானி குழுமத்துக்கு வழங்கி உள்ளது. மன்னார் காற்றாலை திட்டத்தை அதானி குழுமத்துக்கு வழங்க வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமக்கு நெருக்கடி கொடுத்ததாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே என்னிடம் தெரிவித்தார் என இலங்கை மின்சார வாரியத்தின் தலைவர் பெர்டினாண்டோ கூறியிருந்தார். இலங்கை நாடாளுமன்ற குழுவின் விசாரணையில் இதனை பெர்டினாண்டோ தெரிவித்தார்.

இது மிகப் பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே, இந்திய பிரதமர் மோடி, அதானிக்காக நெருக்கடி கொடுத்தார் என தாம் கூறவே இல்லை என மறுத்தார்.
இதனையடுத்து இலங்கை மின்சார வாரிய தலைவர் பெர்டினாண்டோவும் தாம் தவறுதலாக இந்திய பிரதமர் மோடியின் பெயரை குறிப்பிட்டதாகவும் இதற்காக மன்னிப்பு கேட்பதாகவும் பகிரங்கமாக கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் இலங்கை மின்சார வாரிய தலைவர் பதவியில் இருந்து பெர்டினாண்டோ ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்டதாக இலங்கை மின்சார துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மேலும் இலங்கை மின்சார சபையில் புதிய தலைவராக இளங்ககோன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications