கோத்தபாய ராஜபக்சேவுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு- இந்தியாவுக்கு வர அழைப்பு
Recommended Video
கொழும்பு: இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள கோத்தபாய ராஜபக்சேவை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று கொழும்பில் சந்தித்தார். இச்சந்திப்பின் போது இந்தியாவுக்கு வருகை தருமாறு கோத்தபாய ராஜபக்சேவுக்கு ஜெய்சங்கர் அழைப்பு விடுத்தார்.
இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட 7-வது அதிபராக கோத்தபாய ராஜபக்சே பதவியேற்றுள்ளார். அவருக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் இந்தியாவுக்கு வருகை தருமாறு கோத்தபாய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இதனை ஏற்று தாம் நவம்பர் 29-ல் இந்தியா வருகைதர உள்ளதாக கோத்தபாய ராஜபக்சே கூறியிருந்தார்.

இந்நிலையில் கொழும்பில் கோத்தபாய ராஜபக்சேவை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று நேரில் சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போதும் கோத்தபாயவை இந்தியாவுக்கு வருகை தர ஜெய்சங்கர் முறைப்படி அழைப்புவிடுத்தார்.
இதனை தாம் ஏற்றுக் கொண்டு இந்தியா செல்ல இருப்பதாகவும் இப்பயணத்தின் போது பிராந்திய பாதுகாப்பு, அமைதி மற்றும் பொருளாதார உறவுகள் குறித்து விவாதிக்க உள்ளதாக கோத்தபாய ராஜபக்சே தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கோத்தபாய ராஜபக்சே அதிபராக பதவி ஏற்ற பின்னர் இலங்கைக்கு சென்ற முதலாவது வெளிநாட்டு அமைச்சர் ஜெய்சங்கர். முன்னதாக நேற்று முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.
இலங்கைக்கு இந்திய அமைதிப்படை சென்றபோது அதன் ஆலோசகராக இருந்தவர் ஜெய்சங்கர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications