கோத்தபாய ராஜபக்சேவுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு- இந்தியாவுக்கு வர அழைப்பு
Recommended Video
கொழும்பு: இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள கோத்தபாய ராஜபக்சேவை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று கொழும்பில் சந்தித்தார். இச்சந்திப்பின் போது இந்தியாவுக்கு வருகை தருமாறு கோத்தபாய ராஜபக்சேவுக்கு ஜெய்சங்கர் அழைப்பு விடுத்தார்.
இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட 7-வது அதிபராக கோத்தபாய ராஜபக்சே பதவியேற்றுள்ளார். அவருக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் இந்தியாவுக்கு வருகை தருமாறு கோத்தபாய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இதனை ஏற்று தாம் நவம்பர் 29-ல் இந்தியா வருகைதர உள்ளதாக கோத்தபாய ராஜபக்சே கூறியிருந்தார்.

இந்நிலையில் கொழும்பில் கோத்தபாய ராஜபக்சேவை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று நேரில் சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போதும் கோத்தபாயவை இந்தியாவுக்கு வருகை தர ஜெய்சங்கர் முறைப்படி அழைப்புவிடுத்தார்.
இதனை தாம் ஏற்றுக் கொண்டு இந்தியா செல்ல இருப்பதாகவும் இப்பயணத்தின் போது பிராந்திய பாதுகாப்பு, அமைதி மற்றும் பொருளாதார உறவுகள் குறித்து விவாதிக்க உள்ளதாக கோத்தபாய ராஜபக்சே தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கோத்தபாய ராஜபக்சே அதிபராக பதவி ஏற்ற பின்னர் இலங்கைக்கு சென்ற முதலாவது வெளிநாட்டு அமைச்சர் ஜெய்சங்கர். முன்னதாக நேற்று முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.
இலங்கைக்கு இந்திய அமைதிப்படை சென்றபோது அதன் ஆலோசகராக இருந்தவர் ஜெய்சங்கர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி












Click it and Unblock the Notifications