Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மனநோயாளிகள்தான் பிரபாகரனை முன்வைத்து அரசியல் செய்வார்களாம்.. கொந்தளித்த கோத்தபாய ராஜபக்சே

பிரபாகரன் உயிருடன் இல்லவே இல்லை என அடித்து சொல்கிறார் இலங்கை மாஜி ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே.

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: மனநோயாளிகள்தான் பிரபாகரனை முன்வைத்து அரசியல் செய்வார்கள் என இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடனும் நலமுடனும் இருக்கிறார் என தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் அறிவித்தார். 2009-ம் ஆண்டு இலங்கை இறுதி யுத்தத்துக்குப் பின்னர் இதே கருத்தை நெடுமாறன் பல முறை கூறியிருந்தார்.

Gotabaya Rajapaksa, Mahinda Rajapaksa reject Pazha.Nedumarans claim on Prabhakaran is Alive

ஆனால் இம்முறை பிரபாகரன் குடும்பத்தினரின் அனுமதியுடன் உலகத் தமிழர்களுக்கு அறிவிக்கிறேன் என அழுத்தம் திருத்தமாக நெடுமாறன் கூறினார். மேலும் இலங்கையில் சீனாவின் ஆதிக்கம், இந்தியாவின் நிலை உள்ளிட்டவை குறித்தும் நெடுமாறன் தமது அறிக்கையில் விவரித்திருந்தார்.

பழ.நெடுமாறனின் அறிக்கையும் அறிவிப்பும் பெரும் விவாதங்களை கிளப்பிவிட்டுள்ளது. பழ.நெடுமாறனின் அறிவிப்பு தொடர்பாக தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் பலரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருவதால் குழப்பமும் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் சிங்கள அரசியல்வாதிகள் ஒருமித்த குரலில் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்றே கூறி வருகின்றனர்.

இந்நிலையில் 2009-ம் ஆண்டு பிரபாகரன் மரணம் அடைந்ததாக சொல்லப்பட்ட காலத்தில் இறுதி யுத்தத்தை முன்னெடுத்த இலங்கை பாதுகாப்புத் துறை செயலரும் பின்னாளில் ஜனாதிபதியானவருமான கோத்தபாய ராஜபக்சேவும் கருத்து தெரிவித்துள்ளார்.

Gotabaya Rajapaksa, Mahinda Rajapaksa reject Pazha.Nedumarans claim on Prabhakaran is Alive

இது தொடர்பாக கோத்தபாய ராஜபக்சே கூறுகையில், மனநோயாளிகள்தான் பிரபாகரனை முன்வைத்து அரசியல் செய்வார்கள். பிரபாகரனின் உடலை கைப்பற்றி எரித்த 2009-ம் ஆண்டே அத்தனையும் முடிந்து போய்விட்டது. முடிவுக்கும் வந்துவிட்டது. பிரபாகரன், மனைவி, மகள், மகன்கள் அனைவருமே 2009-ம் ஆண்டு இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டுவிட்டனர். ஆகையால் பிரபாகரனை முன்வைத்து அரசியல் செய்கிற மனநோயாளிகளுக்கு நாம் பதிலளிபது வெட்கக் கேடானது என கூறியுள்ளார்.

இதேபோல் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவும் பிரபாகரன் உயிரோடு இருப்பதை நிராகரித்துள்ளார். 2009-ம் ஆண்டு பிரபாகரன் மரணம் அடைந்துவிட்டார். அப்போதே உறுதி செய்துவிட்டோம் என்றார். இதேபோல் 2009-ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது சிங்கள ராணுவ தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவும் பிரபாகரன் உயிருடன் இல்லை; உயிரிழந்துவிட்டார் என தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+