பிரபாகரனை கொன்றதாக அறிவித்த படைப்பிரிவின் தளபதி கமால் குணரத்ன இலங்கையின் புதிய பாதுகாப்பு செயலாளர்
கொழும்பு: இலங்கையின் புதிய பாதுகாப்பு செயலாளராக ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ தளபதி கமால் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையின் 7-வது நிறைவேற்று அதிபராக கோத்தபாய ராஜபக்சே இன்று பதவி ஏற்றார். மகிந்த ராஜபக்சே அதிபராக பதவி வகித்த காலத்தில் கோத்தபாய ராஜபக்சேதான் பாதுகாப்பு செயலாளராக இருந்தார்.

அப்போதுதான் 2009-ல் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தம் நடைபெற்றது. இந்நிலையில் இலங்கையின் புதிய பாதுகாப்பு செயலாளராக கமால் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். கோத்தபாய ராஜபக்சே, அதிபராக பதவி ஏற்ற பின்னர் நியமித்த முதலாவது நியமனம் இது.

2009-ம் ஆண்டு இறுதி யுத்தத்தில் 53-வது படைப்பிரிவின் தளபதியாக இருந்தவர் கமால் குணரத்ன. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், மூத்த தளபதி சூசை உள்ளிட்டோரை தங்களது படைப்பிரிவுதான் கொன்றதாக ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தவர் இந்த கமால் குணரத்ன.
மேலும் நந்திக் கடலுக்கான பாதை என்ற நூலையும் கமால் குணரத்ன எழுதியுள்ளார்.












Click it and Unblock the Notifications