Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

14 ஆண்டுகளாக பழ.நெடுமாறன் பொய்- பிரபாகரன் குடும்பமே இறந்துவிட்டது- மாஜி இலங்கை தளபதி சரத் பொன்சேகா

பிரபாகரனும் அவரது குடும்பமும் இறுதி யுத்தத்தில் இறந்துவிட்டனர் என்கிறார் இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா.

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக 14 ஆண்டுகளாக தமிழ்நாட்டு அரசியல் தலைவர் பழ.நெடுமாறன் பொய் சொல்லி வருகிறார் என இலங்கை ராணுவத்தின் முன்னாள் தளபதி சரத்பொன்சேகா கூறியுள்ளார்.

2009-ம் ஆண்டு இலங்கை இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் கொல்லப்படவில்லை; அவர் உயிருடனும் நலமுடனும் இருக்கிறார்; இதனை பிரபாகரன் அனுமதியுடன் உலகத் தமிழர்களுக்கு அறிவிக்கிறேன் என்று நேற்று தஞ்சையில் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் கூறியிருந்தார்.

Sarath Fonseka condemns Pazha.Nedumarans claim on LTTE Chief Prabhakaran is alive

மேலும் , தமிழீழ விடுதலைக்கான திட்டத்தையும் பிரபாகரன் அறிவிப்பார் என்பதுடன் ஒரு பக்க அறிக்கை ஒன்றையும் நெடுமாறன் வெளியிட்டார். அந்த அறிக்கையில், சர்வதேசச் சூழலும் இலங்கையில் ராஜபக்சே ஆட்சியை வீழ்த்தும் அளவுக்கு வெடித்து கிளம்பி இருக்கிற சிங்கள மக்களின் போராட்டங்களும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலையை உருவாக்கி உள்ளது. இந்தச் சூழலில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன், நலமுடன் இருக்கிறார் என்கிற நற்செய்தியை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு உறுதியாகத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். இதுவரை அவரைப் பற்றி திட்டமிட்டுப் பரப்பப்பட்ட யூகங்களுக்கும் ஐயங்களுக்கும் இது முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புகிறோம். தமிழீழ மக்களின் விடியலுக்கானத் திட்டத்தை அவர் விரைவில் அறிவிக்க இருக்கிறார் எனவும் நெடுமாறன் கூறியிருந்தார்.

பிரபாகரன் குறித்த நெடுமாறனின் இந்த கருத்தை இலங்கை ராணுவத்தின் முன்னாள் தளபதி சரத்பொன்சேகா திட்டவட்டமாக மறுத்துள்ளார். 2009-ம் ஆண்டு இலங்கை இறுதி யுத்தத்தின் போது ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்சே; பாதுகாப்புத்துறை செயலாளராக கோத்தபாய ராஜபக்சே; ராணுவ தளபதியாக சரத் பொன்சேகா இருந்தனர்.

பிரபாகரன் மரணமடையவில்லை; உயிருடனும் நலமுடனும் இருக்கிறார் என்ற பழ.நெடுமாறன் அறிவிப்பு குறித்து தற்போது சரத் பொன்சேகா கூறியிருப்பதாவது: 2009-ம் ஆண்டு யுத்தத்தின் போது பிரபாகரன், அவரது மனைவி மதிவதனி, மகன்கள் சார்லஸ் ஆண்டனி, பாலச்சந்திரன், மகள் துவாரகா ஆகிய அனைவருமே கொல்லப்பட்டுவிட்டனர். பிரபாகரனின் குடும்பத்தில் யாரும் தப்பிச் செல்லவில்லை. தாம் நடத்திய போராட்டத்தில் ஒட்டு9மொத்த குடும்பத்தையே அர்ப்பணித்தவராகவே பிரபாகரன் திகழ்கிறார்.

கடந்த 14 ஆண்டுகளாக பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என தமிழ்நாட்டு அரசியல் தலைவர் பழ.நெடுமாறன் கூறி வருகிறார். பழ.நெடுமாறன் தொடர்ந்து இந்த பொய்யை கூறி வருகிறார். இப்படியான பொய்யான தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துகின்றனர். இந்தியாவில் சில அரசியல் தலைவர்களுக்கு பிரபாகரன் பெயரை உச்சரிக்க முடியாவிட்டால் பிழைப்பே இல்லை என்கிற நிலைமைதான் உள்ளது. இலங்கை அரசியல் தலைவர்களும் இதேபோல்தான் பிரபாகரனை முன்வைத்து பிழைப்பு நடதிதுகின்றனர். இவ்வாறு பொன்சேகா கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+