திருகோணமலை எரிபொருள் சேமிப்பு கிடங்கு விவகாரம்.. இந்தியாவுடன் மோதல் இல்லை- இலங்கை திடீர் பல்டி
கொழும்பு: திருகோணமலையில் இந்தியா வசம் உள்ள எரிபொருள் சேமிப்பு கிடங்குகளை திரும்ப பெறமாட்டோம் என இலங்கை அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
திருகோணமலையில் 2-ம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட ஏராளமான எரிபொருள் சேமிப்பு கிடங்குகள் உள்ளன. இவற்றில் 99 கிடங்குகளை இந்தியா பயன்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் இலங்கை அமைச்சர் உதயகம்மன் பில, சில நாட்களுக்கு முன்னதாக இந்தியா வசம் இருக்கும் இந்த எரிபொருள் சேமிப்பு கிடங்குகளை தங்கள் வசம் அரசு எடுத்துக் கொள்ளும் என கூறியிருந்தார். இது இந்தியா- இலங்கை உறவில் மிகப் பெரிய விரிசலை ஏற்படுத்தக் கூடியதாக இருந்தது.
தற்போது உதயகம்மன்பில, இந்தியாவிடம் இருந்து எரிபொருள் சேமிப்பு கிடங்குகளை திரும்பப் பெறுவோம் என தாம் சொல்லவில்லை. இந்தியாவுடன் இணைந்து திருகோணமலை எரிபொருள் சேமிப்பு கிடங்குகளை மேம்படுத்துவோம் என்று மட்டுமே கூறியதாக விளக்கம் தந்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக இலங்கைக்கான இந்திய தூதருடன் பேச்சுவார்த்தை எதுவும் தாம் நடத்தவும் இல்லை என்றும் உதயகம்மன்பில கூறியுள்ளார். ஏற்கனவே கச்சத்தீவு அருகே மூன்று தீவுகளில் பிரமாண்ட காற்றாலை அமைக்கும் திட்டத்தை சீனாவிடம் இலங்கை ஒப்படைத்திருக்கிறது. இது இந்தியாவை கடும் அதிருப்தி அடைய வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை?












Click it and Unblock the Notifications