சக்சஸ்- மன்னார், பூநகரியில் மெகா காற்றாலை மின் திட்டம்: அதானி குழுமத்துக்கு அனுமதி கொடுத்தது இலங்கை!
கொழும்பு: இலங்கையின் மன்னார் வளைகுடா பகுதியில் மன்னார், பூநகரியில் மெகா காற்றாலை மின் திட்டங்களை செயல்படுத்த இந்தியாவின் அதானி குழுமத்துக்கு இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கியதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தமது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
Recommended Video
இலங்கையின் மன்னார் வளைகுடா கடற்பரப்பு நீண்டகாலமாக சர்வதேச நாடுகளால் இலக்கு வைக்கப்பட்ட ஒன்றாக இருந்து வருகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இலங்கை அரசுக்கும் 2002-ம் ஆண்டு பேச்சுவார்த்தைக்கான சூழல் உருவான போது, மன்னார் வளைகுடாவில் எண்ணெய் வளம் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இலங்கை அரசுக்கும் இடையே மத்தியஸ்தராக செயல்பட்ட நார்வேதான் இன்னொரு பக்கம், மன்னார் கடற்பரப்பில் எண்ணெய் வளம் குறித்து ஆய்வு செய்தது. மன்னார் தொடங்கி தமிழகத்தின் காவிரி படுகை கடலோரப் பகுதிகளில் இயற்கை எரிவாயு வளம் கொட்டிக் கிடக்கிறது என நார்வே ஆய்வு அறிக்கை கொடுத்தது. பின்னர் இந்தத் திட்டம் அவ்வப்போது பேசுபொருளாக இருப்பதும் கிடப்பில் போடப்படுவதும் தொடர் கதையாகிவிட்டது.
இதனைத் தொடர்ந்து மன்னார் வளைகுடாவில் மெகா காற்றாலை திட்டத்தை இலங்கை அமைக்கப் போவதாக கூறப்பட்டது. மன்னார் வளைகுடா என்பது இந்தியாவின் தென் எல்லை தொடக்கமான தமிழ்நாட்டுக்கு மிக மிக அருகே உள்ள பகுதி. ஆகையால் இந்த காற்றாலைத் திட்டத்தை பெறுவதற்கு இந்தியா, இலங்கையுடன் பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்தியது. ஆனால் இலங்கை அரசாங்கமோ திடீரென சீனாவுக்கு இந்த மெகா காற்றாலைத் திட்டத்தை கொடுத்தது.

மன்னார் வளைகுடாவில் சீனா ஊடுருவுவதற்கு இலங்கையே சிவப்புக் கம்பளம் விரித்தது இந்தியாவை கடும் கோபம் அடைய வைத்தது. சீனாவுக்கு மன்னார் வளைகுடாவில் காற்றாலை திட்டம் அமைக்க அனுமதிக்கக் கூடாது என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தியது. ஒருகட்டத்தில் இந்தியாவின் கோரிக்கையை ஏற்று சீனாவுக்கு மெகா காற்றாலை அமைக்கும் திட்டத்துக்கு கொடுக்கப்பட்ட அனுமதியை இலங்கை அரசு ரத்து செய்தது. இதனால் சீனா கொந்தளித்தது.
இந்நிலையில் இலங்கையின் எரிசக்தித் துறை அமைச்சர் கஞ்சன விஜேசகர தமது ட்விட்டர் பக்கத்தில், இந்தியாவின் அதானி கிரீன் எனர்ஜி குழுமத்துக்கு மன்னாரில் 286 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலை, பூநகரியில் 234 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலைகளை 500 மில்லியன் டாலர் முதலீட்டில் தொடங்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ளார்.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications