Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செம்ம ட்விஸ்ட்- பதவியை தக்க வைக்க மகிந்த ராஜபக்சேவை டிஸ்மிஸ் செய்ய போகும் கோத்தபாய ராஜபக்சே?

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கையில் பொதுமக்கள் தன்னெழுச்சியாக பல வாரங்களாக நடத்தி வரும் தொடர் போராட்டங்களின் உச்சமாக பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே டிஸ்மிஸ் செய்வது என ஜனாதிபதியும் மகிந்தவின் தம்பியுமான கோத்தபாய ராஜபக்சே முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இலங்கையின் பொருளாதாரம் மோசமான வீழ்ச்சியை அடைந்ததால் அத்தியாவசியப் பொருட்களின் விலை மிக மிக கடுமையாக உயர்ந்தது. பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் ஒட்டுமொத்த இலங்கையுமே போர்க்களமாகிப் போனது. இலங்கையில் பெரும்பாலான இடங்கள் போராட்ட களங்களாக மாறிப் போகின.

இலங்கை கிளர்ச்சி

இலங்கை கிளர்ச்சி

இலங்கை தலைநகர் கொழும்பு காலிமுகத் திடலில் 21 நாட்களாக தொடர் போராட்டத்தை மக்கள் முன்னெடுத்து வருகின்றனர். கொழும்புவில் கோத்தபாய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சேவின் மாளிகைகள் தொடர் முற்றுகைப் போராட்டங்களுக்குள்ளாகி இருக்கின்றன. இலங்கையின் மலையகத் தமிழர்களான இந்திய வம்சாவளித் தமிழர்கள், ஈழத் தமிழர்கள் என அனைத்து தரப்புமே இப்போராட்டத்தில் இணைந்துள்ளன.

இடைக்கால அரசாங்கம்

இடைக்கால அரசாங்கம்

இந்த நிலையில் போராட்ட பதற்றங்களைத் தணிக்கும் வகையில் இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் மகிந்த ராஜபக்சவோ, இடைக்கால அரசாங்கத்தை அமைத்தாலும் தாமே பிரதமர்; என்னை கழுத்தை பிடித்து வெளியே தள்ளினாலும் கூட பிரதமர் பதவியை விட்டுப் போக முடியாது என்கிறார். இருந்தாலும் மகிந்த ராஜபக்ச கவுரவமாக பதவியை விட்டுப் போய்விடுவதுதான் மரியாதை என பவுத்த பிக்குகள் மிரட்டி வருகின்றனர்.

மகிந்தவுக்கு ஆப்பு

மகிந்தவுக்கு ஆப்பு

இந்நிலையில் இலங்கையில் புதிய திருப்பமாக, மகிந்த ராஜபக்சேவை மட்டும் ஓரம் கட்டுகிற முயற்சிகள் முனைப்புடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இத்தனைக்கும் இந்த புதிய முயற்சிகளை முன்னெடுப்பதே ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சேதான். தமது பதவியை தக்க வைப்பதற்காக ராஜபக்சேவை நீக்கிவிட்டு புதிய இடைக்கால அரசாங்கம் அமைப்பது தொடர்பாக பல்வேறு தரப்புடன் கோத்தபாய ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில்தான் மகிந்த ராஜபக்சேவை பதவி நீக்கம் செய்வது என கோத்தபாய முடிவு எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Recommended Video

    Chinas Debt Trap Diplomacy: Pakistan, Sri Lanka Crisis Lessons | OneIndia Tamil
    உச்சகட்ட குழப்பம்

    உச்சகட்ட குழப்பம்

    கோத்தபாயவின் இந்த முடிவுக்கு எதிராக மகிந்தவும் அவரது இதர சகோதரர்களும் என்ன எதிர்வினையாற்றுவார்கள்? என்பது பெரும் பார்ப்பாக உள்ளது. இதனால் இலங்கையில் உச்சகட்ட அரசியல் குழப்பம் தொடருகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+