இலங்கையில் அதிபர் தேர்தல் தேதி .. தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கொழும்பு: இலங்கையில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தேதிகளை அந்நாட்டு தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சவை வீழ்த்தி மைதிரிபால சிறிசேன வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த 4 வருடங்களாக ஆட்சியில் இருந்து வருகிறார் அதிபர் சிறிசேன.

இந்நிலையில் இலங்கை தலைமை தேர்தல் ஆணையர் மகிந்தா தேசபிரியா அந்நாட்டு அதிபர் தேர்தல் தேதியை அறிவித்துள்ளார். கொழும்பில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், இலங்கையில் நவம்பர் 15 முதல் டிசம்பர் 7 வரை அதிபர் தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளார்.
அதிபர் தேர்தல் தேதியை மாற்றும் அதிகாரம் அதிபர் சிறிசேனவுக்கு மட்டுமே உள்ளதாக அவர் தெரிவித்தார். எனினும் தேர்தல் தேதிகளை முன்கூட்டியே அறிவிக்க மட்டும் அதிபருக்கு அதிகாரம் உள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள காலக்கெடுவை தாண்டி ஒத்திவைக்க அவருக்கு அதிகாரம் இல்லை என்றார். தேர்தல் தேதி தொடர்பாக சபாநாயகர், பிரதமர், அதிபர், ஆகியோருடன் முன்பு ஆலோசிக்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையர் தேசபிரியா தெரிவித்தார்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications