இலங்கையில் பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு- பல இடங்களில் மோதல்கள் வெடித்தன!

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கையில் பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் பல இடங்களில் விற்பனை நிலையங்களில் ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல்கள் வெடித்துள்ளன.

Recommended Video

    Srilanka Economic Crisis Explained

    இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களைப் போலவே பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

    Srilanka: Fuel Crisis turn to violences in many Places

    எரிபொருட்கள் விற்பனை நிலையங்கள் பொதுமக்கள் பல மணிநேரம் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர்.

    மேலும் பொதுமக்களுக்கு கேன்கள் மற்றும் பீப்பாய்களில் எரிபொருளை வழங்குவதை தவிர்க்க வேண்டும் என்று இலங்கை அரசாங்கம் உத்தரவிட்டிருந்தது. ஆனாலும் பொதுமக்கள் கேன்களுடன் எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசைகளில் காத்து நிற்கின்றனர்.

    பல விற்பனை நிலையங்களில் எரிபொருள் தீர்ந்துவிட்டதாக அதன் உரிமையாளர்களும் ஊழியர்களும் தெரிவிக்கின்றனர். ஆனால் வரிசைகளில் காத்திருந்த பொதுமக்கள் இந்த ஏமாற்றத்தை எதிர்கொள்ள முடியாமல் மோதலில் ஈடுபடுகின்றனர்.

    இலங்கையின் பல பகுதிகளில் இந்த மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன. இதனால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்கனவே கோத்தபாய அரசுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் பெட்ரோல், டீசலுக்கான பொதுமக்கள் மோதலில் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+