ராஜபக்சே திருடர்கள்- நாளையே நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தாக்கல் செய்ய சஜித் பிரேமதாச வலியுறுத்தல்
கொழும்பு: இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை சபாநாயகர் நாளையே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று சஜித் பிரேமதாச பேசியதாவது: இங்கே வந்து யாரும் பொய் வாக்குறுதிகள் தர வேண்டாம், நாட்டின் இந்த நிலைமைக்குக் காரணமானவர்கள் வீட்டிற்கு செல்ல வேண்டும், ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் வீட்டிற்கு செல்ல வேண்டும், பிரதமர் தலைமையிலான அரசாங்கம் வீட்டிற்கு செல்ல வேண்டும், இரண்டு நம்பிக்கை இல்லா தீர்மானங்களைக் கொண்டு வந்துள்ளோம். 225 எம்.பிக்களில் யார் யார் இந்த நாட்டு மக்கள் மக்கள் பக்கம் இருக்கிறார்கள்? யார் யார் ஆட்சியில் இருக்கும் திருடர்கள் பக்கம் இருக்கிறார்கள் என்று இந்த நாட்டு மக்களுக்கு பார்த்துக் கொள்ள முடியும்.

இது பிராந்திய பொருளாதார நெருக்கடி அல்ல. இது இலங்கைக்கான நெருக்கடி. 30 மாதங்களாக உங்கள் அரசாங்கம் உருவாக்கிய நெருக்கடி இது. தற்போது தீர்வு தேவை என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். 30 மாதங்களாக செயல்பாட்டில் இருந்த கிணற்றுத் தவளைக் கருத்தைத் தவிர்த்து, இப்போது உலகத்துடன் பேசத் தயாராகிவிட்டீர்கள் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்திய பிரதமர் மோடி வரவிருக்கும் போது கருப்புக் கொடி ஏற்றினீர்கள். இந்தியாவிலிருந்து கொஞ்சம் பணத்தை பெற்று, சர்வதேச நாணய நிதியத்திற்குச் சென்று சில முயற்சிகளை மேற்கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் ஒன்றைச் சொல்ல வேண்டும். மக்கள் அவதிப்படுகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டதை நான் ஒப்புக் கொள்கிறேன். உங்கள் கோரிக்கையை நிறைவேற்றினோம். இது ஒரு பொறுப்பான கட்சி. சில விஷயங்களைச் செய்ய வேண்டாம் என்று எமக்கு கூறினீர்கள். IMF க்கு செல்வதால் ஸ்திரத்தன்மையின் சிக்கலை ஏற்படுத்தும் என்று . நாங்கள் அதைக் கேட்டோம். இந்த அதிகார பேராசையால் பிரதமராகவோ, ஜனாதிபதியாகவோ ஆக வேண்டும் என்ற ஆசை எங்களுக்கு இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
பதவிகளுக்குள் எங்களை மட்டுப்படுத்தாதீர்கள். நாட்டிற்கு சரியானதைச் செய்தால் நாங்கள் அதற்கு ஆதரவாக இருப்போம். நாங்கள் எப்போதும் தூதர்களை சந்திப்போம். இந்தியா உங்களுக்கு உதவும் முன், உதவ வேண்டுமா வேண்டாமா என்று என்னிடம் கேட்டார்கள். உண்மைக்கதை. இது நல்லதா கெட்டதா என்று. பொய் என்றால் அமைச்சரிடமே கேளுங்கள். மக்களுக்கு வழங்கக்கூடிய முழு ஆதரவையும் பெற்றுக் கொடுக்குமாறு நாங்கள் கூறினோம். இவ்வாறு சஜித் பிரேமதாச கூறினார்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications