கோத்தபாயவுக்கு கடும் எதிர்ப்பு- வேட்பாளராக உடனே அறிவிக்க மகிந்தவுக்கு ஆதரவாளர்கள் நெருக்கடி!
கொழும்பு: எதிர்ப்புகள் அதிகரித்து வருவதால் இலங்கை பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராக கோத்தபாய ராஜபக்சேவை உடனே அறிவிக்குமாறு மகிந்த ராஜபக்சேவுக்கு அவரது ஆதரவாளர்கள் நெருக்கடி கொடுப்பதாக கூறப்படுகிறது.
பொதுஜன பெரமுனவில் அதிபர் பதவிக்கு போட்டியிட பலரும் முயற்சிக்கின்றனர். கோத்தபாய ராஜபக்சே தாமே போட்டியிடுவேன் என அடம்பிடித்து வருகிறார்.

அவருக்கு எதிராக அமெரிக்காவில் பல போர் குற்றச்சாட்டு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அத்துடன் கோத்தபாய ராஜபக்சேவின் அமெரிக்க குடியுரிமை இன்னமும் ரத்து செய்யப்படவும் இல்லை.
இதனால் கோத்தபாயவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பொதுஜன பெரமுனவில் கோத்தபாய ஆதரவு- எதிர்ப்பு கோஷ்டிகள் உருவெடுத்துள்ளன. இதனால் கோத்தபாய ராஜபக்சேவை வேட்பாளராக அறிவித்துவிடுங்கள் என மகிந்த ராஜபக்சேவுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது.
இதற்காக அக்கட்சியின் மாவட்ட நிர்வாகங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டும் வருகின்றன. அடுத்த மாதம் 11-ந் தேதி நடைபெறும் பெரமுனவின் மாநாட்டில் அதிபர் வேட்பாளரை மகிந்த ராஜபக்சே அறிவிக்கக் கூடும் என தெரிகிறது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications