Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இலங்கையை மிரட்டும் டெல்டா...இந்தியாவை விட 3 மடங்கு வீரியம்-ஒருநாள் கொரோனா மரணங்கள் 100ஐ தாண்டியது!

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய டெல்டா வகை கொரோனா வைரஸ் இலங்கையில் 3 மடங்கு வீரியத்துடன் பரவி உள்ளது. இலங்கையில் ஒருநாள் கொரோனா உயிரிழப்புகள் எண்ணிக்கை 100ஐ தாண்டியதாக உள்ளது.

உலக நாடுகளில் டெல்டா வகை வைரஸ் இந்தியாவில்தான் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. தற்போது உலகின் பல நாடுகளையும் இந்த வைரஸ் பல மடங்கு வீரியத்துடன் தாக்கி வருகிறது.

Srilanka Reports Single day Coronavirus deaths 118

அமெரிக்காவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியதாக உள்ளது. அமெரிக்காவில் ஒருநாள் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 657 ஆகவும் உள்ளது.

மிகச் சிறிய குட்டி தீவு நாடான இலங்கையிலும் மிக வீரியமாக தாக்கி வருகிறது டெல்டா வகை வைரஸ். இது இந்தியாவைவிட 3 மடங்கு வீரியம் கொண்டதாக இருப்பதாக அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அத்துடன் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியதாகவும் ஒருநாள் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 100 ஐ தாண்டியதாகவும் இருப்பதால் இலங்கையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Recommended Video

    மீண்டும் அதிகரிக்கும் Coronavirus.. தடுக்க முடியாமல் விழிபிதுங்கும் China

    இலங்கையின் கொரோனா மரணங்கள் நேற்று 118 ஆக இருந்தது. உலக நாடுகளில் கொரோனா மரணங்கள் பட்டியலில் இலங்கை 18வது இடத்தில் இருக்கிறது. இலங்கையில் கொரோனா தடுப்பூசி போட்டவர்களும் கூட வீரியமான இந்த டெல்டா வைரஸில் இருந்து தப்பமுடியவில்லை என்கின்றன செய்திகள். இலங்கையில் தொடர்ந்து கொரோனா மரணங்கள் 100க்கும் அதிகமாக இருப்பதால் பொதுமக்களிடம் பெரும் அச்சமும் நிலவுகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+