அதிபர் கோத்தபயவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்? இலங்கை எதிர்க்கட்சி பகிரங்க எச்சரிக்கை
கொழும்பு: ‛‛இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே தீர்வு காண வேண்டும். பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கி பொருளாதார பிரச்சனை குறித்து மக்களிடம் உரையாற்ற வேண்டும். இல்லாவிட்டால் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும்'' என அந்நாட்டின் எதிர்க்கட்சியான சமகி ஜன பாலவேகய (எஸ்ஜேபி) தலைவர் சஜித் பிரேமதேசா கூறியுள்ளார்.
இலங்கையில் மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் உணவு பொருட்கள், பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
தினமும் 10 மணிநேரத்துக்கும் அதிகமாக மின்வெட்டு நடைமுறையில் உள்ளது. மேலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள தங்கத்தை விற்பனை செய்து அத்தியாவசிய பொருட்கள் வாங்கி வருகின்றனர்.

மக்கள் போராட்டம்
இதனால் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். எதிர்க்கட்சியினரும் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அவர் இன்னும் பதவி விலவில்லை. இருப்பினும் அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்துள்ளனர். பொருளாதார பிரச்சனைக்கு தீர்வு காணுவம் வகையில் நாடாளுமன்றம் கூடினாலும் இன்னும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படவில்லை.

நம்பிக்கையில்லா தீர்மானம்
இதனால் மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். நேற்று நாடாளுமன்றம் நடந்தபோது பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தள்ளுமுள்ளு ஏற்பட்டு தடியடி நடத்தப்பட்டது. இந்நிலையில் தான் கூட்டு அமைச்சரவைக்கு மறுப்பு தெரிவித்த பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பாலவேகய (எஸ்ஜேபி) கட்சி அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர தயாராக இருப்பதாக கூறியுள்ளது.

இறுதி முடிவு
இதுபற்றி எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா, "அதிபர் கோத்தபய ராஜபக்சே பொருளாதார நெருக்கடி குறித்து பொதுமக்களுக்கு உரையாற்ற வேண்டும். நாட்டு மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் நாட்டில் நிலவும் அசாதாரண சூழலுக்கு தீர்வு காண வேண்டும். இல்லாவிட்டால் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும். இதுதொடர்பாக அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும்.

பகிர்ந்தளிக்க வேண்டும்
மேலும் கோத்தபய ராஜபக்சே நாடாளுமன்ற துறை, நீதித்துறை, நிர்வாகத்துறை என அனைத்து துறைகளையும் தன்னிடமே வைத்துள்ளார். இதை பிரித்து வழங்கப்பட வேண்டும். இதுகுறித்து ஏற்கனவே விவாதித்துள்ளோம்'' என்றார். முன்னதாக இவர் இலங்கையில் அதிகாரம் படைத்த அதிபர் முறைமையை நீக்க வேண்டும். மேலும் பிரதமரும் சர்வாதிகாரமாக செயல்பட அனுமதிக்காமல் இருவருக்கும் அதிகாரங்களை பகிர்ந்தளித்து நாடாளுமன்றத்தை வலுப்படுத்த வேண்டும் என தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தகது.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications