9 மனித வெடிகுண்டுகளில் ஒருவர் பெண்.. இலங்கை பாதுகாப்பு அமைச்சர் பரபர தகவல்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கையில் தற்கொலை படைத் தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் பெண் என பகீர் தகவலை அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின் போது 8 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. தற்கொலை படையினர் நடத்திய இந்த கோர தாக்குதலில் 350-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

Woman among nine bombers in Easter blasts, says Sri Lanka’s defence minister

இதுகுறித்து பாதுகாப்பு துறை அமைச்சர் விஜேவர்தனே கூறுகையில் இந்த தாக்குதலுக்கு இரு இஸ்லாமிய அமைப்புகளே காரணம். ஒன்று தேசிய தவ்ஹீத் ஜமா அத் மற்றும் ஜம்மியாதுல் மில்லாது இப்ராஹிம் ஆகிய அமைப்புகளே குண்டுவெடிப்புக்கு பொறுப்பாகும்.

இதுதொடர்பாக 18 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இரவு பகல் பார்க்காமல் தேடும் பணிகளும் நடைபெறுகின்றன. நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் குற்றவாளிகளை தேடும் பணிகள் நடைபெறுகின்றன.

மேலும் 9 பேர் நடத்திய தற்கொலை தாக்குதலில் ஒரு பெண்ணும் அடங்குவார் என்று அமைச்சர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+