நிதி நெருக்கடி: இலங்கைக்கு ரூ5,600 கோடி கடனுதவி வழங்க ஒப்புதல் தந்தது உலக வங்கி!
கொழும்பு: மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருக்கும் இலங்கைக்கு ரூ5,600 கோடி கடன் உதவி வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
இலங்கையில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டது. இந்த பொருளாதார நெருக்கடியால் மக்களின் இயல்பு வாழ்க்கையே முடங்கிப் போனது. இதனால் பொதுமக்கள் தன்னிச்சையாக கிளர்ச்சியில் ஈடுபட்டனர். மக்களின் இந்த புரட்சியை எதிர்கொள்ள முடியாமல் இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். அத்துடன் இலங்கையை விட்டு தப்பி ஓடி நாடு திரும்பினார். இதேபோல ஜனாதிபதி பதவியில் இருந்த கோத்தபாய ராஜபக்சேவும் உயிருக்கு அஞ்சி வெளிநாட்டுக்கு தப்பி ஓடினார். பின்னர் ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்தார். இலங்கையில் தற்போது ரணில் விக்கிரமசிங்கே ஜனாதிபதியாக இருந்து வருகிறார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியை தீர்க்க, இந்தியா பெருந்தொகையான கடனுதவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. சீனாவும் இலங்கைக்கு கடன் உதவி வழங்கினாலும் குறுகிய கால கடன்களை மட்டுமே தருகிறது. அந்த குறுகிய காலத்தில் கடன் திருப்பி செலுத்தப்படாவிட்டால் குறிப்பிட்ட நிலப்பகுதிகளை இலங்கையிடம் இருந்து சீனா கைப்பற்றிக் கொள்வதும் தொடருகிறது.
இந்த பின்னணியில் இலங்கைக்கு உலக வங்கி கடனுதவி வழங்குவது தொடர்பாகவும் ஆலோசைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தியா உள்ளிட்ட நாடுகளின் வேண்டுகோளை ஏற்று இலங்கைக்கு கடன் உதவி வழங்குவது என உலக வங்கியின் இயக்குநர்கள் கூட்டம் அண்மையில் முடிவு செய்தது.
இதனைத் தொடர்ந்து இலங்கைக்கு 700 மில்லியன் அமெரிக்க டாலர் அதாவது ரூ5,600 கோடி கடன் வழங்க உலக வங்கி ஒப்புதல் தெரிவித்திருக்கிறது. முன்னதாக சர்வதேச நாணய நிதியமும் இலங்கைக்கு பெரும் தொகை கடன் வழங்க ஒப்புதல் தெரிவித்திருந்தது. இந்த கடன்களால் இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சி அடையும் என்பது பொதுவான எதிர்பார்ப்பு.












Click it and Unblock the Notifications