கணவன் + 2 கள்ளக்காதலன்கள்.. மகாலட்சுமி செய்த காரியத்தை பாருங்க.. பரிதாப வேல்முருகன்..!
கள்ளக்காதலனை கொன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்
கடலூர்: வேல்முருகனை கொன்றது யாராக இருக்கும் என்று கடலூர் போலீசார் திணறி வந்த நிலையில், இப்போது ஒரு பெண் சிக்கி கொண்டுள்ளார்.. அவர் சொன்ன வாக்குமூலத்தை கேட்டு, மிரண்டு போயுள்ளனர் போலீசார்..!
சேத்தியாத்தோப்பு அருகே வளையமாதேவி என்ற கிராமம் உள்ளது.. இங்கு வசித்து வருபவர் சிவக்குமார்.. இவரது மனைவி மகாலட்சுமி.. இவருக்கு 40 வயதாகிறது..
இந்நிலையில், அதே கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் என்பவர் 2 நாட்களுக்கு முன்பு மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.. அவருக்கு 50 வயதாகிறது.. கரிவெட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்திலேயே வேல்முருகனின் சடலம் விழுந்து கிடந்தது,

வழக்குப்பதிவு
இது தொடர்பாக சேத்தியாத்தோப்பு உட்கோட்ட டி.எஸ்.பி சுந்தரம் மற்றும் காவல் ஆய்வாளர் மைக்கேல் இருதயராஜ் ஆகியோர் மேற்கொண்ட விசாரணையில் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையை ஆரம்பித்தனர்.. ஆனால் வேல்முருகன் உடம்பெல்லாம் காயங்கள் இருந்தன.. யாரோ அடித்து கொன்றிருக்கலாம் என்று சந்தேகப்பட்ட போலீசார், சடலத்தை போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்..

அடித்து கொலை
அந்த போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் கட்டையால் அடித்து வேல்முருகன் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டது.. இதையடுத்து, அந்த கிராமத்து மக்களிடமே விசாரணை துரிதமானது.. அப்போதுதான் மகாலட்சுமியின் பெயர் அடிபட்டது.. அவருடன் எம்ஜிஆர் (எ) ராமச்சந்திரன் என்பவரின் பெயரும் சேர்ந்தே அடிபட்டது.. 2 பேரையும் போலீசார் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

வாக்குமூலம்
இதில் மகாலட்சுமி தந்த வாக்குமூலம்தான் வழக்கில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியது.. மகாலட்சுமி போலீசில் சொன்னதாவது எனக்கும் வேல்முருகனுக்கும் 4 வருடங்களாக தவறான பழக்கம் இருக்கிறது.. அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்தோம்.. ஆனால், இதே கிராமத்தை சேர்ந்த எம்ஜிஆர் என்ற ராமச்சந்திரனுடன் எனக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. இந்த கள்ளக்காதலை, அந்த கள்ளக்காதலன் வேல்முருகன் கண்டித்தார்... கடந்த 24ம் தேதி இரவு 10 மணிக்கு என் வீட்டுக்கு வேல்முருகன் குடிபோதையில் வந்தார்.. அப்போது என் வீட்டில் கணவரும், குழந்தைகளும் இல்லை..

வேல்முருகன்
அதனால்தான் வீட்டுக்கு வந்தார். அப்போது, நான் ராமச்சந்திரனுடன் போனில் பேசிக்கொண்டிருந்தேன்... இதை பார்த்ததும் வேல்முருகன் ஆத்திரமடைந்து, போன்ல யாரு? ஏன் அவனுடன் பேசுகிறாய்? என்று கண்டித்தார். இது எங்களுக்குள் வாக்குவாதமாய் மாறியது.. உடனே வேல்முருகன், என்னை உல்லாசத்திற்கு வருமாறு அழைத்தார். அதற்கு நான் மறுப்பு சொன்னேன்.. அதனால் வாக்குவாதம் அதிகமாக முற்றியது... ஆத்திரம் அடைந்த நான், கீழே கிடந்த கட்டையை எடுத்து வேல்முருகனை தலையில் ஓங்கி அடித்தேன்..

வாக்குமூலம்
ரத்த வெள்ளத்தில் வேல்முருகன் சுருண்டு விழுந்தார்.. குடிபோதையில் தான் விழுந்து கிடக்கிறார் என்று நினைத்து விட்டுவிட்டேன்.. மறுபடியும் கொஞ்ச நேரம் கழித்து வந்து பார்த்தேன்.. உடம்பில் அசைவே இல்லை.. அப்போதுதான் வேல்முருகன் இறந்துவிட்ட விஷயம் எனக்கு தெரியவந்தது.. உடனே ராமச்சந்திரனுக்கு போனை போட்டு வரவழைத்தேன்.. பிறகு 2 பேரும் சேர்ந்துதான், வேல்முருகன் உடலை தூக்கிசென்று பள்ளி வளாகத்தில் போட்டு விட்டு வந்து விட்டோம் என்று போலீசில் வாக்குமூலம் தந்தார் மகாலட்சுமி.. இப்போது இந்த கள்ளக்காதல் ஜோடி ஜெயிலில் உள்ளது..
-
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்!












Click it and Unblock the Notifications