கடலூரில் சின்னதாய் ட்ரிக்ஸ்.. 6 கோடி சம்பாதித்த பாமக நிர்வாகி.. வங்கிகளையே மிரள வைத்த ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

கடலூர்: ஏமாற்றுபவர்கள் இருக்கும் வரை ஏமாறுபவர்கள் இருப்பார்கள் என்று ஒரு பழமொழி உண்டு.. அதேபோல் ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள் என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம். நடைமுறையில் நம்பவே முடியாத விஷயங்களை செய்வதாக கூறி நம்ப வைத்து சிலர் ஏமாற்றுகிறார்கள். அந்த வகையில் வங்கியில் ஏலம் விடப்படும் நகையை குறைந்த விலைக்கு வாங்கி தருவதாக கூறி பாமக நிர்வாகி ஒருவர் ஏமாற்றியதாக புகார் எழுந்தது. அவரை பற்றி விசாரித்தால் 6 கோடி வரை மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

வேலை வாங்கி தருவதாக மோசடி செய்வோரிடம் பலர் பணம் கொடுத்து ஏமாறுகிறார்கள். அதேபோல் கடன் வாங்கி தருவாக கூறும் நபர்களிடமும் பணம் கொடுத்து பலரும் ஏமாறுகிறார்கள். அந்த வகையில் புதிதாக வங்கியை வைத்து சிலர் மோசடி செய்கிறார்கள்.அப்படி ஒரு மோசடி கடலூர் மாவட்டம் விருத்​தாசலம்​ சுற்​று​வட்​டாரங்​களில் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

A twist for a PMK executive who earned Rs 6 crore by claiming to buy gold and loan in Cuddalore

பாமக நிர்வாகி கைது

கடலூர் மாவட்டம் விருத்​தாசலம்​ சுற்​று​வட்​டாரங்​களில்​ பல்​வேறு நபர்​களிடம்​ ரூ.6 கோடி வரை மோசடி​யில்​ ஈடு​பட்​ட பாமக இளைஞரணி நிர்​வாகி சலீம்​ என்பவரை போலீசார் கைது செய்​துள்னர். கடலூர்​ மாவட்​டம்​ கரு​வேப்​பிலங்​குறிச்​சி​யைச்​ சேர்ந்​த கிருபை என்​பவர்​ விருத்​தா​சலம்​ காவல்​ நிலை​யத்​தில்​ அளித்த புகாரில் கூறுகையில், கடலூர் மாவட்டம் பெண்​ணாடத்​தைச்​ சேர்ந்​த ஷேக்​தாவூத்​ மகனான 28 வயதாகும் சலீம்​ என்​பவர், வங்​கி​யில்​ ஏலம்​ விடப்​படும்​ நகைகளை குறைந்​த விலைக்​கு வாங்​கித்​ தரு​வ​தாகக்​ கூறி, ரூ.10 லட்​சத்​தை என்​னிடம்​ வாங்​கினார். ஆனால்​ நகை​யை வாங்​கித்​ தராமல்​ ஏமாற்றுகிறார்​. பணத்​தைத்​ திரும்​பக்​ கேட்​டால்​ கொலை மிரட்​டல்​ விடுக்​கிறார்​" என்று கூறியிருந்தார்​.

பலரிடம் மோசடி

இதே​போன்​று பெண்​ணாடத்​தைச்​ சேர்ந்​த மெய்​கண்​ட​நாதன்​ என்​பவர்​ அளித்த புகாரில், மருத்​து​வப்​ படிப்​பு பயில வங்​கிக்​கடன்​ பெற முயற்​சித்​த​போது, விரை​வாக கடன்​ வாங்​கித்​ தரு​வ​தாகக்​ கூறி சலீமிடம்​ ரூ.6 லட்​சம்​ வரை கொடுத்ததகாவும், ஆனால் அவர் மோசடி செய்​துவிட்டதாகவும் ​ குற்​றச்​சாட்டியிருந்தார். இது​போன்​று 17 பேரிடம்​ ரூ.1.75 கோடி வரை​​ சலீம்​ முறை​கேடு செய்​திருப்​ப​தாக விருத்​தாசலம்​ காவல்​நிலை​யத்​தில்​ புகார்​கள்​ எழுந்தது.

திருப்பூரில் கைது

இதுத​விர, சலீம்​ மீது குற்​றச்​சாட்​டு​கள்​ கூறி பல்​வேறு மனுக்​கள்​ பெண்​ணாடம்​, திட்​டக்​குடி, கரு​வேப்​பிலங்​குறிச்​சி காவல்​ நிலை​யங்​களுக்​கு புகார் வந்தது. மொத்​தத்​தில்​ ரூ.6 கோடி வரை மோசடி செய்​திருப்​ப​தாக புகார் எழுந்தது. இதையடுத்து சலீம்​ மீது விருத்​தாசலம்​ போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஐயனார்​ வழக்​குப்​ப​திவு செய்​தார்​.

அதைத்​தொடர்ந்​து, திருப்​பூரில்​ தலைமறை​வாக இருந்​த சலீமை போலீ​ஸார்​ நேற்​று அதிரடியாக கைது செய்​தனர்​. கைது செய்​யப்​பட்​டுள்​ள சலீம்​, கடலூர்​ மேற்​கு ​மாவட்​ட​ பாமக இளைஞரணி நிர்​​வாகி​யாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+