சிதம்பரம் நடராஜர் கோயிலில் விதிமீறல்.. தீட்சிதர்கள் எதிர்ப்பை மீறி ஆய்வு செய்த அதிகாரிகள் உறுதி
கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயில் புதிய கட்டுமானங்களில் விதிமீறல்கள் உள்ளதாக இந்து சமய அறநிலைத் துறை கூடுதல் ஆணையர் சங்கர் தெரிவித்துள்ளார். நடராஜர் கோயிலில் அனுமதி பெறாமல் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதாக கூறப்பட்டது குறித்து அறநிலையத் துறை அதிகாரிகள், தொல்லியல் துறையினர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
உலகப் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் பிரதான சின்னங்களை அகற்றிவிட்டு புதிய கட்டுமான பணிகள் நடைபெறுவதாக பக்தர் எம்.என்.ராதா மற்றும் இந்து சமய அறநிலையத் துறை சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு தலைமையிலான அமர்வு, இந்து சமய அறநிலையத் துறையை விசாரித்து அறிக்கை சமர்பிக்க உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்து, இந்து அறநிலையத் துறை இது குறித்து குழு அமைத்து ஆய்வு செய்ய உத்தரவிட்டது.

இந்த நிலையில், இன்று காலை சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் சங்கர் தலைமையில் கடலூர் மாவட்ட இந்து அறநிலையத் துறை இணை ஆணையர் பரணிதரன், திருவண்ணாமலை மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் ஜோதி, தொல்லியல் துறை இணை ஆணையர் சிவானந்தம், ஆலோசகர் மணி உள்ளிட்ட 6 பேர் கொண்ட குழுவினர் வந்தனர்.
முன்னதாக, ஆய்வு குறித்து இந்து சமய அறநிலையத் துறை சார்பாக சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களிடம் கடிதம் அளிக்கப்பட்டது. அதனைப் பெற்றுக் கொண்ட தீட்சிதர்கள் ஆய்வு குறித்து தங்களிடம் முன்கூட்டியே எதுவும் தெரிவிக்கவில்லை எனவும், தங்கள் நிர்வாகத்தின் செயலர் ஊரில் இல்லாததாலும், தங்களது ஆட்சேபனையை தெரிவித்து கோயில் வழக்கறிஞர் சந்திரசேகரின் பதில் கடிதம் அளித்தனர்.
அதனைப் பெற்றுக்கொண்ட இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் குழுவினர் கோயில் வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட கோசாலை, யானை தங்குமிடம், நந்தி மண்டபம் மற்றும் 4 கோபுரங்கள், அம்மன்கோயில், நடராஜர் கோயிலின் உள் பிரகாரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆய்வு செய்தனர்.
காலையில் தொடங்கிய அதிகாரிகள் ஆய்வு மதியம் 2 மணி வரை நீடித்தது. ஆய்வு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் சங்கர் கூறுகையில், "கோயில் புதிய கட்டுமானங்களில் விதிமீறல்கள் உள்ளதாக கூறினார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications