Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தொடரும் வேட்டை! ஸ்டாலின் குறித்து அவதூறு பதிவு.. கடலூர் மாவட்ட பாஜக ஐடி விங்க் தலைவர் அதிரடி கைது

Subscribe to Oneindia Tamil

கடலூர்: தமிழக முதல்வர் ஸ்டாலினின் போட்டோவை அவதூறாக சித்தரித்து முகநூலில் பதிவிட்ட கடலூர் மேற்கு மாவட்ட பாஜக ஐடி விங்க் தலைவரான ஜெய்க்குமாரை நெல்லை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் கீரப்பாளையத்தை சேர்ந்தவர் ஜெய்க்குமார். இவர் கடலூர் மேற்கு மாவட்ட ஐடி விங்க் தலைவராக உள்ளார். இவர் திமுகவை விமர்சனம் செய்து தனது பேஸ்புக் பக்கத்தில் தொடர்ந்து பதிவுகள் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

Cuddalore District BJP IT Wink Executive Jaikumar Arrested For Slandering Chief Minister Stalins Photo On Facebook

இந்நிலையில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெய்க்குமார் தனது பேஸ்புக் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பதிவிட்டதாக கூறப்படுகிறது. அதாவது முதல்வர் ஸ்டாலின் போட்டோவை அவதூறாக சித்தரித்து விமர்சனம் செய்து இருந்தார்.

இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட திமுகவினர் அங்குள்ள போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் விசாரணை நடத்தினர். இந்நிலையில் இன்று அதிகாலையில் கடலூர் மாவட்டம் கீரப்பாளையத்துக்கு சென்ற திருநெல்வேலி போலீசார் ஜெய்க்குமாரை கைது செய்தனர்.

இதையடுத்து மேல் விசாரணைக்காக அவர் கீரப்பாளையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு அழைத்து செல்லப்பட்டார். தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுக குறித்த அவதூறு கருத்துகளை பதிவிடும் பாஜகவினர் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது கடலூர் மேற்கு மாவட்ட ஐடி விங்க் தலைவர் ஜெய்க்குமாரை போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+