கடலூரில் எலக்ட்ரிக் பைக்குக்கு சார்ஜ் போட்டதுமே.. இனியவன் வீட்டில் நம்ப முடியாத ஆச்சரியம்.. என்னவாம்
கடலூர்: நாட்டில் இன்று எங்கே பார்த்தாலும் இ - பைக்குகளை நம்மால் பார்க்க முடிகிறது.. காரணம், பெட்ரோல் விலையேற்றம், சுற்றுச்சூழல் அக்கறை, பராமரிப்பு செலவு குறைவு போன்ற காரணங்களால் நம்முடைய தமிழகத்திலும் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அப்படித்தான் இ - பைக்குகளை கடலூர் இனியன் ஆசைப்பட்டு வாங்கியிருக்கிறார். என்ன நடந்தது?
கடந்த 5 வருட காலமாகவே, சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், ஈரோடு போன்ற நகரங்களில் இ பைக்குகளின் பயன்பாடு அதிகமாகி விட்டதாக கூறுகிறார்கள்,.. காரணம், ஆபீஸ் செல்பவர்கள், டெலிவரி பணிகள், கல்லூரி மாணவர்களின் பயன்பாடு போன்றவை காரணமாக இ-பைக்குகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

இ-பைக்குகள்
மாதந்தோறும் பெட்ரோலுக்கு ஆயிரக்கணக்கில் செலவு செய்வதைவிட, இ-பைக்கில் சார்ஜிங் செலவு மிகவும் கம்மியாகும்.. அதனால் நடுத்தர மற்றும் இளம் வயதினர் மத்தியில் இதற்கான ஆர்வம் அதிகரித்துள்ளது. போதாக்குறைக்கு தமிழக அரசு இதற்காக மானியம் வழங்குகிறது..
இதனை தவிர, வாகன பதிவு கட்டணங்களில் சலுகை, சாலை வரி விலக்கு போன்ற ஊக்குவிப்பு விஷயங்களும்கூட, இ-பைக்குகளின் விற்பனையை மத்தியில் தூண்டியுள்ளது. இதனால் இளைஞர்கள் மட்டுமல்ல, பெண்கள், வயதானவர்களாலும் ஈஸியாக ஓட்ட முடியும் என்பதால், இ பைக்குகள் அவர்களிடமும் கவனம் பெற்று வருகிறது.
இ பைக் - சார்ஜிங் வசதிகள்
ஆனாலும், கிராமப்புறங்களில் இன்னும் இ பைக்குகளின் பயன்பாடு குறைவாக உள்ளதாம்.. ஏனென்றால் சார்ஜிங் வசதிகள் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக கிடைப்பதில்லை.. நீண்ட பயணம் என்றால் இன்னும்கூட, வாகன ஓட்டிகள் நம்புவது பெட்ரோல் வாகனங்களைதான்..
இப்போதுதான், சார்ஜிங் ஸ்டேஷன்கள் ஆங்காங்கே தமிழகத்தில் மெதுவாக அதிகரித்து கொண்டிருக்கின்றன.. பெரிய பெரிய ஷாப்பிங் மால்கள், பெட்ரோல் பங்குகள், மெட்ரோ ஸ்டேஷன்கள், பஸ் ஸ்டாண்டுகள் அருகில் என சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.. நாளடைவில் இது அதிகரிக்கும் என தெரிகிறது.
மலைப்பிரதேசங்களிலும் இந்த வசதி மெல்ல தலைதூக்குகிறது.. கடந்த மாதம்தான் ஊட்டியிலும் சார்ஜிங் ஸ்டேஷன் கொண்டுவரப்பட்டுள்ளது.. எப்படியும் அடுத்த சில வருடங்களில் பெட்ரோல் பைக்குகளுக்கு நல்ல மாற்றாக இந்த இ-பைக்குகள் வந்துவிடும் என்றே தெரிகிறது. அந்த அளவுக்கு மிகுந்த முக்கியத்துவமும், ஆர்வத்தையும் பெற்று வருகிறது.
கடலூர் இனியவன்
ஆனால், கடலூரில் நடந்த ஒரு சம்பவம், பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது.. அங்குள்ள ஒரு வீட்டிலும் இ-பைக் வாங்கி இருக்கிறார்கள்.. என்ன நடந்தது தெரியுமா?
கடலூர் அண்ணா நகரில் வசித்து வருபவர் இனியவன் சேது... இவர் அங்குள்ள ஒரு தனியார் ஹோட்டலில் அக்கவுண்ட்டண்டாக வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டில் 2 எலக்ட்ரிக் பைக்குகள் உள்ளன... இதனை தவிர, பெட்ரோல் பைக் ஒன்றும் உள்ளது.. மொத்தம் 3 பைக்குகளை இனியவன் சேது வைத்துள்ளார்.
3 பைக்குகள்
நேற்றைய தினம், தன்னுடைய வீட்டில் 3 பைக்குகளையும் நிறுத்தி வைத்துள்ளார்.. அதில், இ பைக் ஒன்றுக்கு சார்ஜ் போட்டுவிட்டு வீட்டுக்குள் சென்றிருக்கிறார்.
கொஞ்ச நேரத்திலேயே அந்த இ பைக் எரிந்துவிட்டது.. அதேபோல பக்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 பைக்குகளும் எரிந்து போனது... இதனை தவிர, 2 சைக்கிள்கள், மின் மோட்டார் உள்ளிட்ட பல பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த இனியவன் சேது, உடனடியாக கடலூர் புதுநகர் போலீசுக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தந்தார்.. இதையடுத்து போலீசாரும், கடலூர் தீயணைப்பு வீரர்களுடன் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
ரூ.3 லட்சம்
மேலும், வீட்டில் தீப்பற்றி எரிந்த இ பைக்கின் சிசிடிவி காட்சிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.. சார்ஜ் போடப்பட்ட இ பைக்குடன் சேர்த்து 3 பைக்குகளும் எரிந்து நாசமானது, கடலூரில் மிகுந்த பரபரப்பை தந்து வருகிறது.
கடலூரில் வீட்டில் சார்ஜ் போட்டு வைத்திருந்த இ-பைக் உடன் மேலும் 2 பைக்குகள், மின் மோட்டார் என பல பொருட்கள் எரிந்து நாசமடைந்தன. இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். எரிந்த பைக்குகள் உள்ளிட்ட பொருள்களின் மொத்த மதிப்பு ரூ.3 லட்சமாம்...!!
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications