இரு கால்கள் துண்டித்து.. தலை சிதைத்து.. சென்னை டிரைவர் படுகொலை.. உடலை ஆந்திரத்தில் வீசிய கும்பல்
கடலூர்: கடலூரில் கடந்த வாரம் கடத்தி செல்லப்பட்ட டிரைவர் ஒருவர் 2 கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடலூர் செம்மண்டலத்தை சேர்ந்தவர் அருள்மொழி. இவருடைய மகன் வினோத்குமார் (27). இவர் சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான கால் டாக்சி நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார்.
தீபாவளியை கொண்டாட கடந்த வாரம் சொந்த ஊரான செம்மண்டலத்திற்கு வந்தார். கடந்த 16-ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த அவரை 5 பேர் கொண்ட கும்பல் வேனில் கடத்தியது.

அருள்மொழியின் தந்தை
இதை கண்ட அருள்மொழியின் தந்தை போலீஸில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் வினோத்குமாரையும் அந்த 5 பேர் கொண்ட கும்பலையும் தேடி வந்தனர். இந்த நிலையில் ஆந்திர மாநிலம் கடப்பாவில் ராமாபுரம் பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் கிடப்பதாக தகவல் கிடைத்தது.

கடலூர் போலீஸார்
மேலும் அந்த இளைஞரின் சடலம் அருகே ஒரு அடையாள அட்டை இருந்ததை அடுத்து அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு புகார் அளித்தனர். அந்த அட்டையில் வினோத்குமார், செம்மண்டலம், கடலூர் மாவட்டம் என இருந்தது. இதையடுத்து ராமாபுரம் போலீஸார் கடலூர் போலீஸாரை தொடர்பு கொண்டு விசாரித்தனர்.

கடலூர் போலீஸார் விசாரணை
அப்போது வினோத்குமாரை 5 பேர் கடத்திச் சென்றதாகவும் அவரை தேடி வருவதாகவும் கடலூர் போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து இறந்து கிடந்தது வினோத்குமார்தான் என உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நேற்றைய தினம் ஆந்திராவுக்கு கடலூர் போலீஸார் விரைந்தனர்.

தலை சிதைப்பு
அவரது கால்கள் துண்டிக்கப்பட்டு, தலை சிதைக்கப்பட்டும் மிக கொடூரமான முறையில் இறந்து கிடந்தார். வினோத்குமாரை வேனில் கடத்திச் சென்று கொலை செய்தார்களா, அல்லது தமிழகத்தில் கொன்றுவிட்டு ஆந்திரத்தில் வீசிவிட்டனரா என்று சந்தேகிக்கப்படுகிறது. அவரது கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்தும் ராமாபுரம் போலீஸார் விசைரணை நடத்தி வருகிறார்கள்.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
கடலூரில் மீண்டும் ஹைட்ரோகார்பன் அபாயம்! 4 கிணறுகள் அமைக்க விண்ணப்பம்.. விஜய் என்ன செய்ய போகிறார்? -
அரசு பேருந்து ஓட்டுநரை பட்டா கத்தியால் வெட்டிவிட்டு எஸ்கேப் ஆன தவெக நிர்வாகி கைது -
சட்டம் ஒழுங்கில் பெரிய ஓட்டை.. நாமக்கல்லில் தலைதூக்கிய துப்பாக்கி கலாச்சாரம்! 20 சவரன் நகை அபேஸ்! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications