கடலூர் டாஸ்மாக் முன்பு ஆவேசமான குடிமகன்.. 'இது டுபாக்கூர் சரக்கு..' ஃபுல் போதையில் புலம்பல்
கடலூர்: தான் வாங்கி குடித்த மது போலி என்றும். உடலுக்கு கேடு விளைவித்துவிடும் என்றும் குற்றம்சாட்டிய போதை ஆசாமி ஒருவர், கடலூர் அருகே டாஸ்மாக் கடை பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
கடலூர் அருகே டாஸ்மாக்கில் மதுவாங்கிய குடிமகன், அதுபற்றி பேசிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் அவர் பேசுகையில்,மதுபானத்தை பொறுத்தவரை பச்சை கலர் சிம்பள் இருந்தால் மட்டுமே நாம் குடிக்கலாம். இது எம்பிசி.. கடைகளில் இதுபோன்ற டுபாக்கூர் சரக்கு தான் போடுறாங்க.. எனக்கு மாரடைக்கிறது..

எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது.நான் என்ன செய்வது? பாட்டில் ஒன்றாக இருக்கிறது. பிராண்ட் வேறயாக இருக்கிறது என்று புலம்பினார். முன்னதாக டாஸ்மாக்கில் விற்பனையாளர்களிடம் மதுவின் தரம் குறித்து கேள்வி எழுப்பி மல்லுக்கட்டினார். வரி கட்டும் தனக்கு பதில் அளிக்க வேண்டும் என்று முறையிட்டார். கேட்கிற பிராண்ட் சரக்குகள் கிடைப்பது இல்லை என்று அவர்களிடம் சண்டையிட்டார். இதனை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொதுவாக தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் பல்வேறு வகையான மதுபான வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு சில பிராண்டுகள் மட்டுமே எளிதாக கிடைப்பதாகவும் சில பிராண்டுகள் கிடைப்பது இல்லை என்று குற்றச்சாட்டுகளை மதுப்பிரியர்கள் அவ்வப்போது வைப்பது உண்டு. அதேபோல் மதுபோதை போதிய அளவில் ஏறவில்லை என்றால், இன்னொரு குவாட்டர் வாங்க வேண்டிய நிலை இருப்பதாவும், போதை சரியாக ஏறாத சரக்கை டுபாக்கூர் சரக்கு என்றும் விமர்சிக்கிறார்கள். டாஸ்மாக் கடைகளில் குடிமகன்கள் அடிக்கடி இப்படி விமர்சிப்பதும் உண்டு.
இதேபோல் டாஸ்மாக் கடைகளில் குவாட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாயும், ஆப் பாட்டிலுக்கு 20 ரூபாயும், புல் பாட்டிலுக்கு 40 ரூபாயும் வசூலிக்கப்படுவதாக குடிமகன்கள் நீண்ட காலமாக குற்றம்சாட்டி வருகிறார்கள். இதனை தடுக்க கடும் நடவடிக்கை எடுத்து வரும் டாஸ்மாக் நிர்வாகம், இந்த புகாரில் சிக்கும் ஊழியர்கள் கண்டிப்பாக உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று அறிவித்துள்ளது. அதேபோல் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க பில்லிங் முறையையும் சோதனை அடிப்படையில் பல்வேறு கடைகளில் அறிமுகம் செய்துள்ளது.. ஆனால் இந்த பஞ்சாயத்து இன்று வரை தீரவில்லை என்று குடிமகன்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications