தீபாவளிக்கு முந்தைய நாளில் சோகம்! கடலூர் டீக்கடையில் சிலிண்டர் வெடித்து விபத்து.. 5 பேர் படுகாயம்
கடலூர்: கடலூரில் டீக்கடையில் கேஸ் சிலிண்டர் வெடித்து ஐந்து பேர் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தீபாவளி பண்டிகையை ஒட்டி அப்பகுதியில் கூட்டம் அதிகம் இருந்த நிலையில், கேஸ் சிலிண்டர் வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் பேருந்து நிலையம் அருகே உள்ள பூ மார்க்கெட் பகுதியில் இன்று மாலை தீபாவளி பண்டிகைக்காக பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் குவிந்ததால் கூட்டம் அதிகமாக இருந்து. இந்நிலையில் அங்கு உள்ள ஓரு டீக்கடையில் பலர் டீ குடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென கடையிலிருந்த கேஸ் சிலிண்டர் வெடித்துச் சிறியது. இதில் கடையில் வேலை செய்த ஊழியர் உள்ளிட்ட ஐந்து பேர் படுகாயமடைந்த நிலையில் அவர்களும் அனைவரும் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிக அழுத்தம் காரணமாக கேஸ் சிலிண்டர் வெடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் நாசமாகியுள்ளன.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கடலூர் பேருந்து நிலையம் மற்றும் பூ மார்க்கெட் பகுதியில் அதிக கூட்டம் இருந்த நேரத்தில் இந்த சிலிண்டர் வெடிப்பு விபத்து ஏற்பட்டதால் கடலூர் மக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications