காதல் திருமணம்.. மனைவியை பிரித்து விட்டனர்.. சேர்த்து வையுங்கள்.. கணவர் குமுறல்

மனைவியை மீட்டு தர கோரி கணவன் புகார் அளித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    தலித் பையனின் குழந்தை வளரக்கூடாது! கர்ப்பத்தை கலைச்சிட்டாங்க.. குமுறும் தந்தை! -வீடியோ

    கடலூர்: "என் மனைவியை என்கிட்ட தந்துடுங்க" என்று இளைஞர் ஒருவர் கலெக்டர் ஆபீசில் மனு தந்துள்ளார்.

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் தாலுகாவை சேர்ந்தவர் சம்பந்தம். இவரது மகள் சாருலதா. இவர் விஜய் என்பவரை உயிருக்கு உயிராக காதலித்து உள்ளார்.

    இருவரும் வேறு வேறு சமூகம் என கூறப்படுகிறது. குடும்பத்தில் எதிர்ப்பு காரணமாக 5வருட காதலர்கள் கல்யாணம் செய்து கொண்டனர்.

    கடலூர்

    கடலூர்

    இது சாருலதாவின் அண்ணனுக்கு பிடிக்கவில்லை என்றும் கணவன் மனைவியை தகராறு செய்து பிரித்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், கடலூர் கலெக்டர் ஆபீசுசில் மக்கள் குறை கேட்பு கூட்டம் நடந்தது. அப்போது விஜய் கையில் மனுவுடன் கூட்டத்துக்கு வந்தார்.

    நடவடிக்கை

    நடவடிக்கை

    "என் மனைவி சாருலதாவை அடித்து உதைத்து சித்ரவதை செய்து என்னிடமிருந்து பிரித்து விட்டார்கள். இது சம்பந்தமாக காட்டுமன்னார் கோவில் போலீஸ் ஸ்டேஷனில் புகார் சொல்லியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    கர்ப்பம்

    கர்ப்பம்

    இப்போது என் மனைவி 2 மாசம் கர்ப்பமாக இருக்கிறார். ஆனால் என் குழந்தை வளர கூடாது என்று சொல்லி, வலுக்கட்டாயமாக கர்ப்பத்தை கலைத்துள்ளனர். இப்போது என் மனைவி, எப்படி இருக்கிறார், என்ன நிலைமையில் இருக்கிறார் என்றுகூட தெரியவில்லை.

    கோரிக்கை

    கோரிக்கை

    கடந்த மூன்று மாசமா மனைவியை பிரிந்து, மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன். மனைவியின் வீட்டினரால் என் உயிருக்கு ஆபத்து உள்ளது. என் மனைவியை என்கிட்ட ஒப்படைச்சிடுங்க" என்று அந்த மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+