வேளாண் பட்ஜெட் 22 : எப்படி இருக்கும் தெரியுமா? அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வத்தின் முக்கிய தகவல்

Subscribe to Oneindia Tamil

கடலூர் : விவசாயிகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் வேளாண் பட்ஜெட் அமையும் எனவும், திமுகவின் 5 ஆண்டுகால ஆட்சி முடிவடைவதற்குள் தமிழகத்தில் பசுமைப்புரட்சி ஏற்படும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

Recommended Video

    வேளாண் பட்ஜெட் 22 : எப்படி இருக்கும் தெரியுமா? அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வத்தின் முக்கிய தகவல்

    வேளாண்மைக்கான தனி பட்ஜெட் தயாரிப்பது தொடர்பாக கடலூர், விழுப்புரம் மாவட்ட விவசாயிகளுடனான கருத்துக்கேட்பு கூட்டம் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

    பின்னர் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அளித்த பேட்டியில் பேசும்போது, "வேளாண்மை வளர்ச்சி திட்டம் விவசாயிகளின் கருத்துகளை கேட்டு வேளாண்மை பட்ஜெட் தயாரிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் உத்தரவிட்டார்.

    உரிய நடவடிக்கை

    உரிய நடவடிக்கை

    அதன்படி கடலூர், விழுப்புரம் மாவட்ட விவசாயிகளிடம் கருத்து கேட்கப்பட்டு உள்ளது. விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை சந்தைப்படுத்த, புதிய வேளாண் கருவிகள் தயார் செய்து தர வேண்டும் போன்ற கருத்துகளை கூறினார்கள். முந்திரி குளிர்பதன கிடங்கு, பலாப்பழத்தை மதிப்பு கூட்டி விற்பனை செய்வது குறித்தும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    வேளாண் திட்டங்கள்

    வேளாண் திட்டங்கள்

    அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தை செயல்படுத்த கடந்த பட்ஜெட்டில் அறிவித்தோம். தற்போது இதை செயல்படுத்த ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 1997 ஊராட்சிகளில் இந்த திட்டம் தொடங்கப்படுகிறது. இதில் வேளாண் சார்ந்த அனைத்து திட்டங்களும் முழுமையாக ஊரக வளர்ச்சி துறை மூலம் செயல்படுத்தப்படும்.

    தமிழகத்தில் பசுமை புரட்சி

    தமிழகத்தில் பசுமை புரட்சி

    விவசாயத்திற்கு தேவையான நீர் ஆதாரம், காய்கறி உற்பத்தி மேம்படுத்தப்படும். இயற்கை வேளாண்மை, விவசாய பொருட்கள் ஏற்றுமதி, வேளாண்மையில் எந்திரமயமாக்கல் செயல்படுத்தப்படும். உழவர் சந்தைகள் தமிழகம் முழுவதும் 180 உழவர் சந்தைகள் உள்ளது. இந்த உழவர் சந்தைகள் மேம்படுத்தப்படும். இந்த திட்டங்கள் அனைத்தும் செயல்பட்டால், வருகிற 5 ஆண்டு முடிவடைவதற்குள் தமிழகத்தில் பசுமைப்புரட்சி ஏற்படும்.

    அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

    அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

    அதேபோல் நேரடிக் கொள்முதல் நிலையங்களில் உள்ள குறைகளை தீர்க்கும் விதமாக நேரடி கொள்முதல் நிலையத்தில் ஒவ்வொரு மூட்டைக்கு ரூ 3.50 காசுகள் மட்டுமே ஊழியர்களுக்கு கூலியாக வழங்கப்பட்ட நிலையில் தற்போது ஒரு மூட்டைக்கு பத்து ரூபாய் கூலி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது இனி விவசாயிகளிடம் காசு கேட்கும் நிலை ஏற்படாது என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறினார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+