இமாச்சலப் பிரதேசத்தில் சோகம்.. 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து! பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
டெல்லி: இமாச்சலப் பிரதேசத்தில், சிம்லாவிலிருந்து ராஜ்கர் வழியாக குப்வி நோக்கிச் சென்ற தனியார் பேருந்து, நாஹனிலிருந்து சுமார் 95 கி.மீ. தொலைவில் உள்ள ஹரிபுர்தார் கிராமம் அருகே 500 அடி ஆழ பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 10க்கும் அதிகமானோர் உயிரிழந்திரந்தனர். பலரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தனர். இந்நிலையில் பலி எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது.
39 இருக்கைகள் கொண்ட அத்தனியார்ப் பேருந்து, அதிகப் பயணிகளுடன் இயங்கியது. விபத்து நடந்தவுடன், அவசரக் குழுக்கள் வரும் முன்பே உள்ளூர் மக்கள் உடனடியாக மீட்புப் பணிகளைத் தொடங்கினர்.

விபத்து குறித்து மாவட்ட நிர்வாகம் தரப்பில், மீட்புப் பணிகள் 'யுத்த கால அடிப்படையில்' நடைபெறுவதாகவும், காயமடைந்தவர்கள் சங்கரா மற்றும் தாதாஹு மருத்துவமனைகளுக்கு விரைவுபடுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு, விபத்துக்கு இரங்கல் தெரிவித்தார். அவர் விடுத்த அறிக்கையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவிகளை வழங்கவும், காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சையை உறுதி செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
விபத்து குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். மத்திய சுகாதார அமைச்சர் ஜே. பி. நட்டா, இமாச்சலச் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஜெய் ராம் தாக்கூர், மாநில பா.ஜ.க தலைவர் ராஜீவ் பிண்டல், ஷிம்லா பா.ஜ.க எம்.பி. சுரேஷ் காஷ்யப் மற்றும் துணை முதலமைச்சர் முகேஷ் அக்னிஹோத்ரி ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.
ஷல்லாய் எம்.எல்.ஏ.வும், தொழில் துறை அமைச்சருமான ஹர்ஷ்வர்தன் சவுகான், விபத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை என்று கூறியுள்ளார். மேலும் மாவட்ட நிர்வாகம் உஷார்படுத்தப்பட்டு, தாதாஹு, சங்கரா, நாஹன் மருத்துவமனைகளில் மருத்துவக் குழுக்கள் அவசர சிகிச்சைக்குத் தயாராக படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
சாலையில் படிந்த பனிப்பொழிவு காரணமாக பேருந்து சறுக்கி, ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம் என்று உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். காயமடைந்தவர்களை உள்ளூர் மக்கள் மனிதச் சங்கிலி அமைத்து இடிபாடுகளிலிருந்து மீட்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவுகின்றன.
உயிரிழந்த குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணமாக வழங்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications