சட்டவிரோதமாக குடியேறிய 145 இந்தியர்களை நாடு கடத்தியது அமெரிக்கா
டெல்லி: அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியதால் நாடு கடத்தப்பட்ட 145 இந்தியர்கள் இன்று காலை டெல்லி விமான நிலையம் வந்தடைந்தனர்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அமெரிக்காவுக்குள் மெக்சிகோ வழியாகத்தான் பெருமபாலானோர் சட்டவிரோதமாக குடியேறுகின்றனர்.

இதனால் மெக்சிகோ அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில் மெக்சிகோவில் இருந்து இறக்குமதியாகும் அத்தனை பொருட்களுக்கும் கடும் வரிவிதிக்க நேரிடும் எனவும் அமெரிக்கா அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதனையடுத்து அக்டோபர் மாதம் மெக்சிகோவில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிய 311 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர். பின்னர் அமெரிக்காவில் இருந்து அக்டோபர் 23-ந் தேதி 117 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர்.
இந்நிலையில் தற்போது 145 இந்தியர்கள், அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் இருந்து நாடு கடத்தப்பட்டனர். 145 இந்தியர்களுடன் வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட நாட்டவரும் ஒரே விமானத்தில் அமெரிக்காவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டனர்.
நாடு கடத்தப்பட்டு டெல்லி திரும்பியவர்களில் பெரும்பாலானோர் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்தான். சர்வதேச ஏஜெண்டுகளிடம் ரூ10 முதல் ரூ15 லட்சம் வரை கொடுத்து அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேற முயற்சித்ததாக நாடு கடத்தப்பட்டோர் தெரிவித்துள்ளனர்.
-
தடுமாறுதே தங்க சந்தை.. மாறி மாறி சரிந்து எகிறும் தங்கத்தின் விலை! இப்போ வாங்கலாமா? வேண்டாமா? -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
பெட்ரோல் விலை பிச்சுகிட்டு போக போகுது..வேலையைக் காட்டிய ரஷ்யா! இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
ஈரான் காட்டிய பச்சைக்கொடி.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 2 எல்பிஜி கப்பல்கள்.. கெத்து காட்டும் இந்தியா! -
இந்தா வாங்கிக்கோ.. என்ன பெரிய எஃப்பிஐ? அமெரிக்காவை அலற விட்ட ஈரான் ஹேக்கர்கள்! ஷாக்குக்கு மேல் ஷாக்! -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருவது உண்மைதான்! அம்பலப்படுத்திய அமெரிக்கா -
வங்கி கணக்கில் வந்து விழுந்த ரூ.10 கோடி.. "வேண்டாம்" என திருப்பி கொடுத்த பெண்! என்ன காரணம் தெரியுமா -
"அடுத்து கியூபா தான்.." ஆட்டத்தை மீண்டும் ஆரம்பிக்கும் அமெரிக்கா.. வெளிப்படையாக டிரம்ப் எச்சரிக்கை -
நீங்க ஒன்னும் மன்னர் கிடையாது.. அமெரிக்காவில் டிரம்புக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம்












Click it and Unblock the Notifications