இக்கட்டான சூழ்நிலையிலும்.. இந்தியா வளர்ச்சி பாதையில் முன்னேறுகிறது.. நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரை
டெல்லி: இக்கட்டான சூழ்நிலையிலும் இந்தியா தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வருகிறது என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்கிய நிலையில், அதன் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இவ்வாறு தெரிவித்தார்.

ராம்நாத் கோவிந்த் இன்று உரையாற்றியபோது திமுக, காங்கிரஸ் உட்பட 19 எதிர்க்கட்சிகள், அதை புறக்கணித்துவிட்டன. விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் உரையை புறக்கணித்தனர்.
இதனிடையே, ராம்நாத் கோவிந்த் தனது உரையில் பேசியதாவது:
கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. இது ஒரு புதிய ஆண்டு & ஒரு புதிய தசாப்தம்.
நாம் சுதந்திரமடைந்த 75வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறோம். நாடாளுமன்ற அனைத்து உறுப்பினர்களும் நம்பிக்கையுடனும் இங்கு வந்துள்ளனர். எவ்வளவு கடினமான சவாலாக இருந்தாலும் நம்மை அது தடுத்து நிறுத்த முடியாது.
கொரானா வைரஸ் தாக்கத்தால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சுய சார்புடன் இருப்பதுதான் தற்போதைய இந்தியாவின் தாரக மந்திரமாக இருக்கிறது. ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் இந்த பெரிய தொற்று நோய் காலத்தில் பெரிய பலனை அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது கட்டுக்குள் உள்ளது.
இந்த தொற்று நோய் காலகட்டத்தில் நாம் பல அன்புக்குரிய குடிமக்களை இழந்துள்ளோம். முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இந்த தொற்று நோய்க் காரணமாக இறந்தார். 6 எம்பிக்கள் உயிரிழந்தனர். அவர்கள் அனைவருக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். நமது நாட்டில் கொரோனா வைரசில் இருந்து மீண்டு கொண்டிருப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இவ்வாறு ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications