நீட் வினாத்தாள் “லீக்” ஆனது உறுதி.. 17 மாணவர்களை தகுதி நீக்கம் செய்தது தேசிய தேர்வு முகமை!
டெல்லி: நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 17 மாணவர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மே 5ஆம் தேதி நடந்த இளநிலை நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 17 பேரை தகுதி நீக்கம் செய்துள்ளது தேசிய தேர்வு முகமை.
நீட் தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 4 ஆம் தேதி வெளியானது. அதன் பிறகு முடிவுகளில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக இந்த பிரச்சனை பூதாகரமானது. இதனைத் தொடர்ந்து 1563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டது தொடர்பாக உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியதை தொடர்ந்து கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்டன. மறுத்தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று மறுதேர்வு நடந்தது.

இதற்கிடையே நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. ஏற்கனவே பீகாரில் 13 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் ஜார்கண்டில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை பாட்னா அழைத்து சென்று போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நீட் தேர்வு வினாத்தாள்களை கசிய விட்டு விற்பனை செய்ததில் சஞ்சய் முக்யா என்பவர் முக்கிய நபராகச் செயல்பட்டது தெரியவந்தது.
மேலும் உத்தர பிரதேசம் வழியாக பீகாருக்கு நீட் வினாத்தாள் விற்பனை செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது. உ.பி காவலர் தேர்வில் வினாத்தாளை கசியவிட்ட ரவி அட்ரி கும்பலுக்கு நீட் வினாத்தாள் கசிவிலும் தொடர்பு இருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்ததை அடுத்து உபி சிறப்பு அதிரடிப்படை போலீசாரால் ரவி அட்ரி கைது செய்யப்பட்டார்.
நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக மகாராஷ்டிராவில் 2 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். ஆசிரியர்கள் சஞ்சீவ் துக்காராம் ஜாதவ், ஜலீல் உமர்கான் பதான் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் நடந்தது தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
இன்று 750 மாணவர்கள் நீட் மறு தேர்வு எழுதவில்லை.. 48% ஆப்செண்ட்.. ஷாக் தகவலை வெளியிட்ட என்.டி.ஏ!
நீட், நெட் உள்ளிட்ட தேசியத் தேர்வு முகமை நடத்தும் தேர்வுகளில் முறைகேடுகளைத் தடுக்க மத்திய அரசு ஒரு உயர்நிலைக் குழுவை அமைத்துள்ளது. இஸ்ரோ முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் இந்த குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
இந்நிலையில், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உறுதியானதை அடுத்து, பீகாரில் தேர்வு எழுதிய 17 மாணவர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மே 5ஆம் தேதி நடந்த இளநிலை நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 17 பேரை தகுதி நீக்கம் செய்துள்ளது தேசிய தேர்வு முகமை.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications