வாச்சாத்தி கொடூர வழக்கு: 19 குற்றவாளிகள் சிறை தண்டனைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
டெல்லி: வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட 215 பேரில் 19 பேர் தங்களது தண்டனையை நிறுத்தி வைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
1992-ம் ஆண்டு சந்தனக் கடத்தல் கும்பலை தேடுகிறோம் என்ற பெயரில் தருமபுரி மாவட்ட அரூர் வாச்சாத்தி எனும் மழைவாழ் மக்கள் கிராமத்தில் காவல்துறையினர், வனத்துறையினர் மிகப் பெரும் அட்டூழியங்களில் ஈடுபட்டனர். மொத்தம் 133 அப்பாவி பொதுமக்களை கைது செய்து 18 பெண்களை ஈவிரக்கமே இல்லாமல் பலாத்காரம் செய்தனர்.

பல ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் 2011-ம் ஆண்டு தருமபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. வாச்சாத்தி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மொத்தம் 269 பேர். இந்த தீர்ப்பு வழங்கப்பட்ட போது உயிருடன் இருந்தவர்கள் 219 பேர். இந்த 219 பேருமே குற்றவாளிகள் என அதிரடி தீர்ப்பு வழங்கினார் நீதிபதி குமரகுரு. 12 பேருக்கு 10 ஆண்டு ஜெயில், 5 பேருக்கு 7 ஆண்டு சிறை என தீர்ப்புகள் அதிரடியாக வழங்கப்பட்டன. இந்தியாவில் ஒரே வழக்கில் இத்தனை பேருக்கு ஒட்டுமொத்தமாக தண்டனை வழங்கப்பட்ட முதல் நிகழ்வு இது. அத்துடன் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் 219 பேரும் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், வாச்சாத்தி கிராமத்துக்கே சென்று கள ஆய்வும் மேற்கொண்டார். அண்மையில் இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்து இறுதித் தீர்ப்பு வழங்கிய நீதிபதி வேல்முருகன், 219 குற்றவாளிகளின் மனுக்களையும் ஒட்டுமொத்தமாக டிஸ்மிஸ் செய்தார்.

தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் இத்தீர்ப்புக்கு எதிராக குற்றவாளிகளில் 19 பேர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர். இந்த மேல்முறையீட்டு மனுக்களை எஞ்சிய பலரும் தாக்கல் செய்யக் கூடும் எனவும் கூறப்படுகிறது. 30 ஆண்டுகளுக்கு முன்பு அப்பாவி ஒடுக்கப்பட்ட மழைவாழ் மக்கள் மீது பெருங்கொடூரத்தை நிகழ்த்திய குற்றவாளிகள் எந்த ஒரு சூழலிலும் சட்டத்தின் பிடியில் தப்பிவிடக் கூடாது என்பதால் அந்த மக்களுக்காக போராடிய இயக்கங்களும் இவ்வழக்கில் இணையக் கூடும் எனவும் கூறப்படுகிறது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications