30 வயது நீதிபதி திடீர் தற்கொலை.. வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார்.. டெல்லியில் ஷாக்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் 30 வயது நிரம்பிய நீதிபதி ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் நீதிபதியாக பணியாற்றி வந்தவர் அமன் குமார் ஷர்மா (வயது 30). இவர் டெல்லி கர்கர்டூமா நீதிமன்றத்தில் மாவட்ட சட்ட சேவைகள ஆணையத்தில் முழுநேர செயலாளராக பணியாற்றி வந்தார்.

30-year-old-delhi-judge-died-by-sudicide-at-his-home

இவர் தெற்கு டெல்லியில் உள்ள கிரீன் பார்க் இல்லத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் தான் அமன் குமார் ஷர்மா இன்று வீட்டில் இறந்து கிடந்தார். முதலில் மர்மமான முறையில் அவர் இறந்ததாகவும், குளியலையில் பிணமாக கிடந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அதனை போலீசார் மறுத்தனர்.

அதோடு அமன் குமார் ஷர்மா தூக்கிட்டு தற்கொலை செய்ததாக தெரிவித்தனர். அவரது தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இறந்த அமன் குமார் ஷர்மா, கடந்த 2021ம் ஆண்டு ஜூன் 19 ம் தேதி டெல்லி நீதித்துறையில் பணிக்கு சேர்ந்தார். இவர் கடந்த 2018 ம் ஆண்டில் புனேவில் உள்ள பிஏ எல்எல்பி படிப்பை முடித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+