காற்று மாசு.. ஒன்னும் தெரியவில்லை.. வழிமாற்றி விடப்பட்ட விமானங்கள்.. டெல்லியில் கடும் பாதிப்பு!
காற்று மாசு காரணமாக டெல்லியில் தரையிறங்க வேண்டிய 32 விமானங்கள் வேறு விமான நிலையத்திற்கு வழி மாற்றி விடப்பட்டுள்ளது.
டெல்லி: காற்று மாசு காரணமாக டெல்லியில் தரையிறங்க வேண்டிய 32 விமானங்கள் வேறு விமான நிலையத்திற்கு வழி மாற்றி விடப்பட்டுள்ளது.
காற்று மாசு காரணமாக டெல்லியில் மிக மோசமான சூழ்நிலை நிலவி வருகிறது. டெல்லியில் காற்று மாசு புள்ளிகள் அபாய கட்டத்தில் இருக்கிறது. இதன் அர்த்தம் அங்கிருக்கும் காற்று மனிதர்கள் சுவாசிக்க தகுதியற்றதாகும்.
டெல்லியில் மருத்துவ அவசர நிலை எனப்படும் medical emergency அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதையடுத்து டெல்லியில் உடனடியாக கட்டுமான பணிகள் எல்லாம் நிறுத்தப்படுகிறது. அதன்படி டெல்லியில் 8 இடங்களில் காற்று மாசு புள்ளிகள் 999 புள்ளியை தொட்டு இருக்கிறது. 9 இடங்களில் புள்ளிகள் 920 புள்ளிகளை தாண்டி இருக்கிறது.
இதனால் டெல்லியில் பகல் நேரம் கூட எதுவும் தெரியவில்லை. 10 மீட்டர் தூரத்தில் இருக்கும் விஷயம் எதுவும் இதனால் கண்ணுக்கு தெரியவில்லை. இந்த அதீத புகை காரணமாக டெல்லியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. சாலை போக்குவரத்து இதனால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
செர்னோபிலே தேவலாம்.. சுவாசிக்க திணறும் டெல்லி.. அபாய கட்டத்தில் காற்று மாசு.. மக்கள் அச்சம்!
அதேபோல் டெல்லி மற்றும் டெல்லியை சுற்றி இருக்கும் பகுதிகளில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 5ம் தேதி வரை அங்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. காலநிலையை பொறுத்து விடுமுறை குறித்து பிறகு அறிவிக்கப்படும் என்று என்று டெல்லி அரசு கூறியுள்ளது.
அதேபோல் டெல்லியில் காற்று மாசு காரணமாக 32 விமானங்கள் வழி மாற்றி விடப்பட்டுள்ளது. டெல்லி விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்க முடியவில்லை என்பதால், விமானம் அருகில் உள்ள நகரங்களுக்கு மாற்றி விடப்பட்டு இருக்கிறது.