Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெரும் எதிர்பார்ப்புக்கிடையே.. லோக்சபாவில் தாக்கலானது மகளிர் இட ஒதுக்கீடு மசோதா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் 33% மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை புதிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் தாக்கல் செய்து உள்ளார்.

கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத் தொடர் நடைபெற்று முடிந்த நிலையில், நாடாளுமன்றத்தில் சிறப்புக் கூட்டத்தை கூட்ட இருப்பதாக மத்திய அரசு கடந்த சில வாரங்களுக்கு முன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த கூட்டத் தொடரில் வரலாற்று சிறப்பு மிக்க முடிவுகள் எடுக்கப்படும் என்று செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் திடீரென இப்படி ஒரு சிறப்புக் கூட்டத் தொடர் கூட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்ட நிலையில், இக்கூட்டத்தொடரில் இதில் விவாதிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகின. மேலும் ஜி 20 நாடுகள் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் அளித்த விருந்து அழைப்பிதழில், பாரத குடியரசுத் தலைவர் என குறிப்பிடப்பட்டு இருந்ததால் நாட்டின் பெயர் பாரத் எனவும் மாற்றப்படலாம் என்று செய்திகள் கசிந்தன.

மேலும் டிசம்பர் மாதமே மத்திய அரசு மக்களவைத் தேர்தலை நடத்த முடிவு செய்து இருப்பதால் சிறப்பு கூட்டத் தொடரை கூட்டுவதாகவும் கூறப்பட்டது. இந்த பரபரப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் பழைய நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று தொடங்கியது. 5 நாட்கள் நடைபெற உள்ள இந்த மழைக்கால கூட்டத் தொடர் செப்டம்பர் 22 ஆம் தேதி நிறைவடைகிறது.

33% reservation bill for women will be tabled in the Lok Sabha today - Union Minister Arjunram Meghwal

நேற்றைய அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால சிறப்புகள், முக்கிய முடிவுகளை, நிகழ்வுகளை குறிப்பிட்டு வரலாறு குறித்து பேசினார். அவரை தொடர்ந்து ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால வரலாற்றை நினைவுகூர்ந்தனர். நாடாளுமன்ற கூட்டத்துக்கு பின் மத்திய கேபினட் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் இருந்த முக்கிய கோரிக்கையான பெண்களுக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் 33% இடஒதுக்கீடு வழங்குவது பற்றி முடிவு செய்யப்பட்டது. இந்த சிறப்புக் கூட்டத்தொடரிலேயே அந்த மசோதா தாக்கல் செய்யப்படலாம் என்றும் தகவல் வெளியானது. இந்த நிலையில் நேற்று பழைய நாடாளுமன்றக் கட்டிடத்துக்கு பிரதமர், மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள் பிரியா விடை கொடுத்தனர்.

33% reservation bill for women will be tabled in the Lok Sabha today - Union Minister Arjunram Meghwal

இன்று மதியம் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சிறப்புக் கூட்டத் தொடர் தொடங்கியது. புதிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மகளிருக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்து இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+