Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெல்லியில் விஸ்வரூபம்: 4 உச்சநீதிமன்ற நீதிபதிகள், 402 நாடாளுமன்ற பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிஉச்சமாக பரவி வருகிறது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் 4 பேர் மற்றும் 402 நாடாளுமன்ற பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.5 லட்சத்தை தாண்டியுள்ளது. இன்று காலையுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் 1,59,632 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும் நேற்று மட்டும் நாடு முழுவதும் கொரோனாவால் 327 பேர் உயிரிழந்தனர்.

நாட்டின் தலைநகர் டெல்லியில் சனிக்கிழமையன்று ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20,181 ஆக பதிவாகி இருந்தது. கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று மட்டும் 11,869 பேர் குணடைந்துள்ளனர். மேலும் நேற்று கொரோனாவால் 7 பேர் உயிரிழந்தனர்.

 டெல்லியில் அதிகரிப்பு

டெல்லியில் அதிகரிப்பு

டெல்லியில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை- ஆக்டிவ் கேஸ்கள் 48,178. டெல்லியில் கொரோனா பரவலைத் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. வார இறுதி நாட்களில் டெல்லியில் ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

 நாடாளுமன்ற பணியாளர்களுக்கு கொரோனா

நாடாளுமன்ற பணியாளர்களுக்கு கொரோனா

இதனிடையே நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறுவதால் பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. நாடாளுமன்ற பணியாளர்கள் மொத்தம் 1409 பேருக்கு ஜனவரி 4-ந் தேதி முதல் ஜனவரி 8-ந் தேதி வரை கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் 402 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 லோக்சபா, ராஜ்யசபா ஊழியர்கள்

லோக்சபா, ராஜ்யசபா ஊழியர்கள்

நாடாளுமன்றத்தில் லோக்சபாவில் பணியாற்றும் 200 பேர், ராஜ்யசபா பணியாளர்கள் 69 பேர், இதர துறை பணியாளர்கள் 133 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இதனையடுத்து நாடாளுமன்ற பணியாளர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அண்மையில் 50% பணியாளர்களை மத்திய அரசு வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதித்திருந்தது.

 உச்சநீதிமன்ற நீதிபதிகள் 4 பேருக்கு கொரோனா

உச்சநீதிமன்ற நீதிபதிகள் 4 பேருக்கு கொரோனா

இதனிடையே உச்சநீதிமன்ற நீதிபதிகள் 32 பேரில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 150 உச்சநீதிமன்ற பணியாளர்கள் கொரோனா பாதிப்பு அல்லது கொரோனா அச்சம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக தலைமை நீதிபதி என்.வி.ரமணா, கொரோனா பாதிப்பு தொடர்பாக நீதிபதிகளுடன் ஆலோசனை நடத்தி இருந்தார். மேலும் நேரடி விசாரணைகளையும் உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்திருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+