இந்தியாவில் 24 மணிநேரத்தில் 14,821 பேருக்கு கொரோனா; 445 பேர் மரணம்; 2-வது இடத்தில் டெல்லி
டெல்லி: இந்தியாவில் 24 மணி நேரத்தில் 14,821 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் 445 பேர் மரணமடைந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலக நாடுகளில் கொரோனாவின் பாதிப்பு முன் எப்போதையும்விட படுவேகமாக பரவி வருகிறது. உலக நாடுகளில் கொரோனாவின் பாதிப்பு 90 லட்சத்தை தாண்டிவிட்டது.

உலக நாடுகளில்...
அனைத்து நாடுகளிலும் இதுவரை மொத்தம் 90,50,891 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கொரோனா மரணங்கள் 4,70,795 ஆகவும் அதிகரித்திருக்கிறது. உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இந்தியா 4-வது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 14,821 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

24 மணிநேரத்தில் 445 பேர் மரணம்
மேலும் இந்தியாவில் 24 மணிநேரத்தில் 445 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை இல்லாத வகையில் கொரோனா பாதிப்பும் மரணங்களும் முதல் முறையாக மிக அதிகமாக உள்ளன. இதனைத் தொடர்ந்து இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,25,282 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல் இந்தியாவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 13699 ஆக உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிரா, டெல்லி
மாநிலங்களில் மகாராஷ்டிராவில்தான் மிக மோசமான பாதிப்பு உள்ளது. மகாராஷ்டிராவில் மட்டும் 1,32,075 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இம்மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6,170 ஆக உள்ளது. மகாராஷ்டிராவுக்கு அடுத்ததாக 2-வது இடத்தில் டெல்லி உள்ளது. டெல்லியில் கொரோனா பாதிப்பு 59,746 ஆகவும் மரணங்கள் 2,175 ஆகவும் இருக்கிறது.
Recommended Video

தமிழகம், குஜராத் நிலவரம்
நீண்டகாலம் 2-வது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது 3-வது இடத்தில் இருக்கிறது. தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 59,377. இங்கு மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 757 ஆகும். 4-வதாக குஜராத் மாநிலம் உள்ளது. குஜராத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 27,317 ஆக இருக்கிறது. இங்கு கொரோனாவால் மொத்தம் 1,664 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
ஹார்முஸில் இந்திய கப்பல்களுக்கு ஆபத்து? LPG பிரச்சனை தீராது போலயே! மிக முக்கிய தகவல் -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
அமராவதிக்கு அங்கீகாரம்! முடிவுக்கு வந்த ஆந்திரா தலைநகர் குழப்பம்! சாதித்து காட்டிய சந்திரபாபு நாயுடு -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்!












Click it and Unblock the Notifications