Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரதமரின் வீட்டு வசதி திட்டம்.. தமிழகத்தில் 6 லட்சத்து 21 ஆயிரம் வீடுகள்.. அறிய வேண்டிய மேஜர் விஷயம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தால், அனைவருக்கும் வீடு என்ற இலக்கை மையமாக கொண்டு பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 6 லட்சத்து 21 ஆயிரத்து 609 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்த பிறகு, ஏழைகளுக்கு வீடு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக அறிவித்தது. மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகம் சார்பில் அனைவருக்கும் வீடு என்ற இலக்குடன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதி திட்டம் என்ற பெயரில் கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் கட்டப்படும் வீடுகளுக்கு மத்திய அரசு தலா ரூ.1.20 லட்சம் முதல் ரூ.1.30 வரை மானியம் வழங்கி வருகிறது. மீதி தொகையை அந்தந்த மாநில அரசுகள் வழங்குகின்றன.

central govt notification pm aawas yojana pmay

இந்நிலையில் பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதி திட்டத்தின்படி கடந்த மாதம் 5-ந்தேதி வரையிலான நிலவரப்படி மாநிலங்கள் வாரியாக கட்டுவதற்காக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள வீடுகள் தொடர்பான புள்ளி விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி இந்தியா முழுவதும் 2 கோடியே 94 லட்சத்து 63 ஆயிரத்து 337 வீடுகள் கட்ட மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதில், 2 கோடியே 64 லட்சத்து 43 ஆயிரத்து 972 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசின் புள்ளி விவரங்களில் கூறப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தில் 37 லட்சத்து 98 ஆயிரத்து 404 வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் 36 லட்சத்து 66 ஆயிரத்து 197 வீடுகள் கட்டி பயன்பாட்டுக்கு வந்துள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமான வீடுகள் மத்திய பிரதேசத்தில் பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதி திட்டத்தின்படி கட்டி முடித்து பயன்பாட்டிற்கு வந்திருப்பதாக புள்ளி விவரங்களில் தெரிகிறது.

மத்திய பிரதேசத்திற்கு அடுத்தப்படியாக பீகாரில் 37 லட்சத்து 867 வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, 36 லட்சத்து 59 ஆயிரத்து 827 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. பீகாருக்கு அடுத்தபடியாக, உத்தரபிரதேசத்தில் 36 லட்சத்து 12 ஆயிரத்து 499 வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு 35 லட்சத்து 90 ஆயிரத்து 229 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேற்கு வங்காளத்தில் 45 லட்சத்து 69 ஆயிரத்து 276 வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, 34 லட்சத்து 14 ஆயிரத்து 321 வீடுகளும் கட்டப்பட்டிருக்கிறது.

குஜராத்தில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 9 ஆண்டுகளில் மொத்தம் 14 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன, இதில் நகர்ப்புறத்தில் 8.68 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. கிராமங்களில் 5.57 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 8,46,931 வீடுகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழகத்தில் 7 லட்சத்து 41 ஆயிரத்து 469 வீடுகள் கட்டுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் 6 லட்சத்து 21 ஆயிரத்து 609 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த அளவில் மிகவும் குறைவாக லட்சத்தீவில் 53 வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, வெறும் 45 வீடுகள் மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் கட்டப்பட்டிருக்கிறது.

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், சொந்த வீடு கட்ட முடியாதவர்கள் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் சொந்த வீடு கட்ட முடியும். வீடற்ற குடும்பமாக இருப்பவர்கள் . ஒன்று அல்லது இரண்டு அறைகள், கச்சா சுவர்கள், கச்சா கூரை கொண்ட குடும்பங்கள்,
25 வயதுக்கு மேற்பட்ட கல்வியறிவற்ற குடும்பம். 16 முதல் 59 வயது வரையிலான வயது வந்த ஆண் உறுப்பினர் இல்லாத குடும்பம், 16 முதல் 59 வயது வரை வயது வந்த உறுப்பினர்கள் இல்லாத குடும்பம், உடல் திறன் கொண்ட உறுப்பினர்கள் இல்லாத குடும்பங்கள், மாற்றுத்திறனாளி உறுப்பினர்களைக் கொண்டவர்கள், நிலமற்ற குடும்பங்கள், சாதாரண வேலை மூலம் வருமானம் ஈட்டுபவர்கள், பட்டியல் சாதியினர், பழங்குடியினர், மற்றவர்கள், சிறுபான்மையினர் இந்த திட்டத்தின் கீழ் வீடு கட்ட நிதியுதவி பெறலாம். விண்ணப்பிக்கும் நபர் பெயரில் நிரந்தர வீடு இருக்கக்கூடாது.

விண்ணப்பதாரர் 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.விண்ணப்பதாரரின் ஆண்டு வருமானம் ரூ.03 லட்சம் முதல் ரூ.06 லட்சம் வரை இருக்க வேண்டியது கட்டாயம். விண்ணப்பதாரரின் பெயர் ரேஷன் கார்டில் இருக்க வேண்டும். ஆதார் அட்டை அல்லது ஆதார் எண், உங்கள் புகைப்படம், பயனாளியின் வேலை அட்டை அல்லது வேலை அட்டை எண், வங்கி பாஸ் புத்தகம், ஸ்வச் பாரத் மிஷன் (SBM) பதிவு எண், கைபேசி எண் ஆகியவை கொண்டு பிரதமர் இலவச வீடு வழங்கும் திட்டத்திற்கு ஆன்லைனில் ( https://pmaymis.gov.in ) விண்ணப்பிக்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+