பிரதமரின் வீட்டு வசதி திட்டம்.. தமிழகத்தில் 6 லட்சத்து 21 ஆயிரம் வீடுகள்.. அறிய வேண்டிய மேஜர் விஷயம்
டெல்லி: மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தால், அனைவருக்கும் வீடு என்ற இலக்கை மையமாக கொண்டு பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 6 லட்சத்து 21 ஆயிரத்து 609 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்த பிறகு, ஏழைகளுக்கு வீடு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக அறிவித்தது. மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகம் சார்பில் அனைவருக்கும் வீடு என்ற இலக்குடன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதி திட்டம் என்ற பெயரில் கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் கட்டப்படும் வீடுகளுக்கு மத்திய அரசு தலா ரூ.1.20 லட்சம் முதல் ரூ.1.30 வரை மானியம் வழங்கி வருகிறது. மீதி தொகையை அந்தந்த மாநில அரசுகள் வழங்குகின்றன.

இந்நிலையில் பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதி திட்டத்தின்படி கடந்த மாதம் 5-ந்தேதி வரையிலான நிலவரப்படி மாநிலங்கள் வாரியாக கட்டுவதற்காக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள வீடுகள் தொடர்பான புள்ளி விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி இந்தியா முழுவதும் 2 கோடியே 94 லட்சத்து 63 ஆயிரத்து 337 வீடுகள் கட்ட மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதில், 2 கோடியே 64 லட்சத்து 43 ஆயிரத்து 972 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசின் புள்ளி விவரங்களில் கூறப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தில் 37 லட்சத்து 98 ஆயிரத்து 404 வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் 36 லட்சத்து 66 ஆயிரத்து 197 வீடுகள் கட்டி பயன்பாட்டுக்கு வந்துள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமான வீடுகள் மத்திய பிரதேசத்தில் பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதி திட்டத்தின்படி கட்டி முடித்து பயன்பாட்டிற்கு வந்திருப்பதாக புள்ளி விவரங்களில் தெரிகிறது.
மத்திய பிரதேசத்திற்கு அடுத்தப்படியாக பீகாரில் 37 லட்சத்து 867 வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, 36 லட்சத்து 59 ஆயிரத்து 827 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. பீகாருக்கு அடுத்தபடியாக, உத்தரபிரதேசத்தில் 36 லட்சத்து 12 ஆயிரத்து 499 வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு 35 லட்சத்து 90 ஆயிரத்து 229 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேற்கு வங்காளத்தில் 45 லட்சத்து 69 ஆயிரத்து 276 வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, 34 லட்சத்து 14 ஆயிரத்து 321 வீடுகளும் கட்டப்பட்டிருக்கிறது.
குஜராத்தில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 9 ஆண்டுகளில் மொத்தம் 14 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன, இதில் நகர்ப்புறத்தில் 8.68 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. கிராமங்களில் 5.57 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 8,46,931 வீடுகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழகத்தில் 7 லட்சத்து 41 ஆயிரத்து 469 வீடுகள் கட்டுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் 6 லட்சத்து 21 ஆயிரத்து 609 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த அளவில் மிகவும் குறைவாக லட்சத்தீவில் 53 வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, வெறும் 45 வீடுகள் மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் கட்டப்பட்டிருக்கிறது.
வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், சொந்த வீடு கட்ட முடியாதவர்கள் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் சொந்த வீடு கட்ட முடியும். வீடற்ற குடும்பமாக இருப்பவர்கள் . ஒன்று அல்லது இரண்டு அறைகள், கச்சா சுவர்கள், கச்சா கூரை கொண்ட குடும்பங்கள்,
25 வயதுக்கு மேற்பட்ட கல்வியறிவற்ற குடும்பம். 16 முதல் 59 வயது வரையிலான வயது வந்த ஆண் உறுப்பினர் இல்லாத குடும்பம், 16 முதல் 59 வயது வரை வயது வந்த உறுப்பினர்கள் இல்லாத குடும்பம், உடல் திறன் கொண்ட உறுப்பினர்கள் இல்லாத குடும்பங்கள், மாற்றுத்திறனாளி உறுப்பினர்களைக் கொண்டவர்கள், நிலமற்ற குடும்பங்கள், சாதாரண வேலை மூலம் வருமானம் ஈட்டுபவர்கள், பட்டியல் சாதியினர், பழங்குடியினர், மற்றவர்கள், சிறுபான்மையினர் இந்த திட்டத்தின் கீழ் வீடு கட்ட நிதியுதவி பெறலாம். விண்ணப்பிக்கும் நபர் பெயரில் நிரந்தர வீடு இருக்கக்கூடாது.
விண்ணப்பதாரர் 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.விண்ணப்பதாரரின் ஆண்டு வருமானம் ரூ.03 லட்சம் முதல் ரூ.06 லட்சம் வரை இருக்க வேண்டியது கட்டாயம். விண்ணப்பதாரரின் பெயர் ரேஷன் கார்டில் இருக்க வேண்டும். ஆதார் அட்டை அல்லது ஆதார் எண், உங்கள் புகைப்படம், பயனாளியின் வேலை அட்டை அல்லது வேலை அட்டை எண், வங்கி பாஸ் புத்தகம், ஸ்வச் பாரத் மிஷன் (SBM) பதிவு எண், கைபேசி எண் ஆகியவை கொண்டு பிரதமர் இலவச வீடு வழங்கும் திட்டத்திற்கு ஆன்லைனில் ( https://pmaymis.gov.in ) விண்ணப்பிக்கலாம்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications