ஜம்மு காஷ்மீரில் ஊடுருவல்.. கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் 60% பாகிஸ்தானியர்கள்! - இந்திய ராணுவம்
டெல்லி: இந்த ஆண்டு இந்தியாவுக்குள் ஏராளமான ஊடுருவல் முயற்சிகள் நடந்திருப்பதாகவும் அவை அனைத்தும் முறியடிக்கப்பட்டிருப்பதாகவும் ராணுவம் தெரிவித்திருக்கிறது. இந்த நடவடிக்கையில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் 60% பேர் பாகிஸ்தானியர்கள் என்றும் ராணுவம் தெரிவித்திருக்கிறது.
எல்லையில் கொலை எவ்வளவு?: இந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி தொடங்கி டிச.30 வரை மொத்தம் 75 பேர் ஊடுருவல்காரர்களாக அடையாளம் காணப்பட்டு கொல்லப்பட்டிருக்கின்றனர். இதில் 60% பேர் அதாவது 45 பேர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்று ராணுவம் கூறியிருக்கிறது. எல்லையில் ஏறத்தாழ தினமும் ஊடுருவல் முயற்சிகள் நடக்கிறது என்றும், இதன் காரணமாக ராணுவம் தீவிரமான கண்காணிப்பில் இருக்கிறது எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

என்ன பிரச்னை?: ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் தனக்கு சொந்தமானது என்று கொண்டாடுகிறது. ஆனால் இந்தியா இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. எனவே வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இந்த பகுதியை ஆக்கிரமிக்க பாகிஸ்தான் தீவிர முயற்சிகளை மேற்கொள்கிறது. இந்த முயற்சிகளை ராணுவ ரீதியாக செய்தால் சர்வதேச அளவில் கண்டனத்திற்கு உள்ளாக வேண்டி வரும். எனவே ஊடுருவல்காரர்களை அனுப்பி நாச வேலைகளை செய்து வருகிறது.
பாகிஸ்தானின் நிலை: பாகிஸ்தான் இப்போது சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பொருளாதாரத்தில் பலமானதாக இல்லை. ஆனால் இந்த நிலையிலும் கூட, இந்தியாவில் ஊடுருவலை திட்டமிட்டு மேற்கொண்டு வருகிறது. இதில் ஒரு நல்ல விஷயம் என்னவெனில், முன்பு ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த இளைஞர்களை மூளை சலவை செய்து பயன்படுத்தி வந்தது. ஆனால், இந்த முறை இப்படியான மூளை சலவைகள் குறைந்திருப்பதாக ராணுவம் கூறியிருக்கிறது.
இந்த முறை ஜம்முவின் ரஜோரி, பூஞ்ச், தோடா, கிஷ்த்வார், கதுவா மற்றும் ரியாசி ஆகிய பகுதிகளில் தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன என்றும் ராணுவம் கூறியுள்ளது.
பாகிஸ்தானின் திட்டம்: ஊடுருவல்கள் ஒருபுறம் இருந்தாலும் கூட மறுபுறும், தனது ராணுவத்தை பலப்படுத்தும் பணியில் அந்நாடு இறங்கியுள்ளது. குறிப்பாக சீனாவிடமிருந்து 5ம் தலைமுறை போர் விமானங்களை வாங்க இருக்கிறது. இது இந்தியாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும். ஏனெனில் இந்தியாவிடம் இப்போது வரை 5ம் தலைமுறை விமானங்கள் கிடையாது. நம்மிடம் இருக்கும் அதிநவீன ரஃபேல் விமானம் கூட 4.5ம் தலைமுறையை சேர்ந்ததுதான். எனவேதான் இந்தியாவுக்கு பாகிஸ்தானின் நடவடிக்கைகள் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.
ஏற்கெனவே இலங்கை மற்றும் மாலத்தீவு ஆகியவற்றை சீனா கைக்குள் போட்டு வைத்திருக்கிறது. இப்போது, பாகிஸ்தானையும் கைக்குள் போட்டுக்கொண்டால் இந்தியா தனியாக விடப்படும். ஆக பாகிஸ்தானின் ஊடுருவலுக்கு பின்னால் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
மத்தியஸ்தம் என பந்தா காட்டிய பாகிஸ்தான்.. அடிக்க வேண்டிய இடத்தில் அடித்த ஈரான்.. ஷெபாஸ் ஷெரீப் ஷாக் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம்












Click it and Unblock the Notifications